உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி நிறுத்தம்

பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி நிறுத்தம்

புதுடில்லி, போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பொய்யான தகவல்களுடன் விளம்பரம் செய்ததை எதிர்த்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமையகம் செயல்படும் உத்தரகண்ட் மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தரகண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு, 14 பொருட்களை தயாரிப்பதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. நாடு முழுதும் உள்ள, 5,606 விற்பனை நிலையங்களில் இருந்து அந்தப் பொருட்களை விலக்கி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த, 14 பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இருந்து விளம்பரங்கள் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை, ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

14 பொருட்கள்

உத்தரகண்ட் அரசு தடை விதித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் விபரம்: ஸ்வசாரி கோல்டு, ஸ்வசாரி வாட்டி, பிரோன்சோம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவாலே, முக்தா வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிபிடாம், பிபிகிரித், மதுகிரித், மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிவாம்ரித் அட்வான்ஸ், லிவோகிரித், ஐகிரித் கோல்டு, பதஞ்சலி திருஷ்டி ஐ டிராப் ஆகியவை.

ஐ.எம்.ஏ., விளக்கம்

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஐ.எம்.ஏ., தலைவர் அசோகன், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, உச்ச நீதிமன்றம் குறித்து அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது, பதஞ்சலி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹீமா கோஹ்லி, சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அசோகன் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:நீதிமன்ற உத்தரவின்படி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் விளம்பரத்தை அசோகன் கொடுத்துள்ளார். சங்கத்தின் மாதாந்திர இதழ், இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டது. அதுபோல், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்ட செய்தியை, அதனடிப்படையில் பல பத்திரிகைகள் வெளியிட்டன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பதஞ்சலியின் வழக்கறிஞர் கருத்தை அமர்வு கேட்டது. அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தத்வமசி
ஜூலை 10, 2024 18:23

உள்நாட்டில் பாபா ராம்தேவ் கம்பெனி வளருவது பிடிக்கவில்லை. அவர்களின் பிசினஸ் அடி படுகிறது. இவர்கள் சம்பாதிக்க வேண்டிய பணத்தை ராம்தேவ் தட்டி படிக்கிறார். அதனால் இந்த விவகாரம் ஊதிப் பெரியதாக்குகிரார்கள்.


Jysenn
ஜூலை 10, 2024 11:37

The names of the banned products look like that of Diravida Model villangam items.


ram
ஜூலை 10, 2024 10:54

ஹிமாலய, ஆச்சி தயாரிப்பு பொருட்கள் எல்லாம் தரமானதா? ஹிந்துக்களை எதாவது ஒரு விதத்தில் தடை செய்யணும் அது அவர்கள் பண்டிகைகளை, அல்லது அவர்களது தயாரிப்புகளை, இதில் நீதி மன்றம் உடனடியாக தலையிட்டு தீர்ப்பு வழங்கும். இன்னும் சில வருடங்களில் ஹிந்துக்கள் அனைவரும் அகதிகளாக போக போகிறார்கள்.


Swaminathan L
ஜூலை 10, 2024 09:52

பிரச்சினை இந்த வழக்கில் ஆயுர்வேதம் பற்றி இல்லை. ஆங்கில மருத்துவத்தைப் பற்றிய எதிர் விமரிசனங்களை முன் வைத்து, தன்னுடைய பொருட்களை சந்தைப்படுத்தியது தான் விவகாரம் ஆனது. இந்த பதினான்கு பொருட்களுக்கும் உற்பத்தி லைசன்ஸ் ஏன் ரத்தானது என்பது பற்றி மக்களுக்கு ஊடகங்கள் விபரமாகத் தெரியப்படுத்த வேண்டும். சர்க்கரை நீரிழிவுப் பிரச்சினையை மேனேஜ் செய்வது, கண்ட்ரோல் செய்வது, குணப்படுத்துவது என்கிற வகையில் எந்த விதமாக சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு சந்தை விளம்பரங்கள் செய்யப்பட்டன?


Rajalakshmi
ஜூலை 10, 2024 11:36

அல்லோபதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? ஸ்ரீராமபிரான் இருந்தாரா, எந்த கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பயின்றார் என எகத்தாளமாக பேசிய தறுதலைகளை இன்றுவரை போற்றவில்லையா ?


Rajalakshmi
ஜூலை 10, 2024 09:26

This is sheer witch-hunting by vindictive vested interests. Would the dubious lawyers have the gumption to crack down on fake healing claims by peddlers of churchianity that are spread all over indiAa ? Almost all allopathy drugs have adverse side effects.


vbs manian
ஜூலை 10, 2024 09:01

நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் மருந்துகள் தயாரித்து கோடி கணக்கான இந்தியர்களுக்கு உதவுவதை பொறாமையால் பன்னாட்டு நிறுவனங்கள் பதஞ்சலியை முடக்க முயற்சி.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2024 08:22

அலோபதிக்கு அரசு தருகின்ற அநியாய அளவு ஆதரவே IMA வை திமிர் பிடித்து ஆட வைக்கிறது. ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் முக்கிய பகுதி. அந்த நம்பிக்கைகளை சர்ச்சைக்குள்ளாக்கியது நியாயமல்ல. இது ஆங்கில மருந்து கம்பெனிகளின் தூண்டுதலின் பேரில் நடப்பது போல உள்ளது.


Saai Sundharamurthy AVK
ஜூலை 10, 2024 09:53

நீங்கள் சொல்வது உண்மை! கோவிட் காலத்தில் கூட ஆயுர் வேதம் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. ஒரு ஆயுர்வேத நிபுணர் எவ்வளவோ முயன்றும், வெளிநாட்டுக்கு பயணம் செய்து நிரூபித்துக் காட்டியும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இந்தியாவில் அலோபதி மருந்தான பாரசிடமால் மாத்திரைகளை கூட கடையில் விற்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏற்கனவே, வீட்டில் சேமித்து வைத்திருந்தவர்களிடம் வாங்கி காய்ச்சல் கண்டவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் வீதம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டனர். எங்கள் பகுதியில் நிறைய பேர் உயிர் பிழைத்தார்கள். AMA சுயநலமாக செயல் படுகிறது. இந்தியாவின் தொன்மையான ஆயுர்வேதத்தை அழிக்கப் பார்க்கிறது. பாபா ராம்தேவ் கம்பெனி தயாரிக்கும் அனைத்து ஆயுர்வேத மருந்துகளும், பொருட்களும் அலோபதிக்கு நிகரானவையே. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்னமும் கூட கிராமங்களில் இயற்கையில் கிடைக்கும் பச்சிலை வைத்தியம் என்பது பிரபலம்.


Rajalakshmi
ஜூலை 10, 2024 10:03

நமது பிரதம மந்திரி அவர்களும் பாபா ராம்தேவ் அவர்களை அம்போ என கைவிடலாமா? பில் கேட்ஸ்க்கு பிஜேபி அரசியல்வாதிகள் அடிவருடிகளாகி விட்டனர்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி