உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் நின்ற லாரி ரயில்கள் நிறுத்தம்

தண்டவாளத்தில் நின்ற லாரி ரயில்கள் நிறுத்தம்

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் நகரின், அப்பல்லோ பெட்ரோல் பங்க் பின் பகுதியில், நேற்று மதியம் 1:00 மணியளவில் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, தண்டவாளத்தின் மீது ஏறி நின்றது.தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், சில நிமிடங்களில் புறப்படவிருந்த பெங்களூரு - சிக்கபல்லாபூர் இடையே பயணிக்கும் இரண்டு ரயில்களின் போக்குவரத்தை நிறுத்தினர். லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார்.போலீசாரும், ரயில்வே ஊழியர்களும் தண்டவாளத்தில் நின்றிருந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீராக்கினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ