உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பீடு இன்றி இயங்கும் 50 சதவீத வாகனங்கள் பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

காப்பீடு இன்றி இயங்கும் 50 சதவீத வாகனங்கள் பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் இயங்கும், 50 சதவீத வாகனங்கள் உரிய காப்பீடு இன்றி இயங்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அபராதம் செலுத்தாத வாகனங்களை போல் இவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.தெலுங்கானாவைச் சேர்ந்தவர் துங்கலா தனலட்சுமி. இவரது கணவர் கடந்த 1996ல் காரில் பயணித்த போது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். அந்த கார், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது.விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீடு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது இழப்பீடு கோரிய குடும்பத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜாய் பாசு, “நாட்டில் இயங்கும் வாகனங்களில், 50 சதவீதத்திற்கு மேல் உரிய காப்பீடு இன்றி உள்ளன.''காப்பீடு எடுத்தவர்களுக்கு நிறுவனங்கள் குழப்பமான விதிகளை காரணம் காட்டி இழப்பீட்டை நிராகரிக்கின்றன,” என்றார்.நீதிபதிகள் கூறியதாவது:நாட்டில் இயங்கும், பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் காப்பீடு இல்லாமல் இருப்பது தீவிரமான பிரச்னை.போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது போல, காப்பீடு இல்லாத வாகனங்களையும் தற்காலிகமாக பறிமுதல் செய்யும் நடைமுறையை அரசு பரிசீலிக்கலாம்.இதை உறுதி செய்ய, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய அரசு இணைந்து புதிய கொள்கை மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும்.அதே போல் வாகன காப்பீடு வகைகள் குறித்து, ஒவ்வொரு நிறுவனம் ஒவ்வொரு மாதிரியான வரையறைகளை கொண்டுள்ளன. இதனால், சந்தா செலுத்தியிருந்தும் இழப்பீடு பெற முடியாமல் மக்கள் நீண்ட காலம் வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர்.எனவே பொதுவான, புரிந்துகொள்ள எளிய வாகன காப்பீட்டு கொள் கையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இந்த வழக்கு இரு வாரங்களுக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Maruthachalam
நவ 01, 2025 23:42

உண்மை இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்மெட் 70 மக்கள் தேவை இல்லை என்றுதான் நினைக்கிறார்கள் தேவை படுகிறவார்கள் அது அவரவர் விருப்பதிகேட்ப போட்டு கொள்ளலாம் என்ற சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆக இருந்தால் அதை நிறை வேற்றுவர்கள் இவர்கள் அப்படி இல்லையே நாமலும் அப்படி இல்லையே என்ன செய்வது அழுகைவேண்டியதுதான்


V.Mohan
நவ 01, 2025 12:46

இனசூரன்ஸ் கம்பெனிகள் பாலிசி எடுப்பவருக்கு எந்த நன்மையோ சலுகையோ தருவதில்லை. அதைவிட இழப்பீட்டு தொகை வழங்க மறுக்கவும், வழக்குகளை வருடக்கணக்காக இழுத்தடிக்கவும் அதிக பணம் கொட்டி கொடுத்து பெரிய வக்கீல்களை நியமிக்கின்றன. இவர்களால் விபத்துகளில் சிக்கும் சாதாரண மக்களுக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட இந்தியாவைப்போல, இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுவதில்லை. இந்திய இன்சூரன்ஸ் கமபெனிகளில், சரியாக ப்ராக்டீஸ் செய்ய முடியாத கைராசியற்ற டாக்டர்களை டெக்னிகல் மதிப்பீட்டாளர்களாக நியமிப்பதால் அவர்கள் மற்ற வெற்றிகர டாக்டர்களின் நர்சிங்ஹோம் தரும் பில்களை அடாவடியாக தணிக்கை என்ற பெயரில் 40 - 50% வரை இதில் இன்சூரன்ஸ் கமபெனி பாலிஸி படி 20% பில் தொகையில் குறைத்துதான் அப்ரூவ் செய்கின்றனர். நோயாளி இன்சூரன்ஸ் எடுத்தும் மினிமம் 40% பில் தொகையில் , கையை விட்டு கட்ட வேண்டி வரும். இந்தளவு முறைகேடு அரசு தரும் மருத்துவ காப்பீடு அல்லது தனியார் வாங்கும் காப்பீடு என்று எல்லாவற்றிலும் உள்ளது. இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ், பெரிய பணக்காரர்களுடைய ஃபாரின் கார்களுக்கும், தனியாரின் 30 லட்ச மதிப்பீடு கார்களுக்கு மட்டும் கிளெய்ம்களை சரியாக செட்டில் செய்கின்றன. மற்றபடி உள்ள கிளெய்ம்களை தனி வக்கீல்கள், இன்சூரன்ஸ் ஏஜண்டுகள், கார்,பஸ்,லாரி, பைக் கம்பெனிகள் கூட்டு சேர்ந்து அவர்கள் விருப்பப்படி, ஒத்துக் கொள்வதோ, ரிஜக்ட் செய்வதோ நடந்து வருகிறது. இது பெரிய நெட் ஒர்க் மாதிரி. இந்தியாவில் இன்சூரன்ஸ் பெரிய முதலைகள். நீதிமன்றங்கள் நன்றாக கண்ணை திறந்து பார்க்கணும். மக்கள் இன்சூரன்ஸ் என்ற ஃபிராடு தொழிலை மதிப்பதே இல்லை.


K.V.K.SRIRAM
நவ 01, 2025 11:01

People taking insurance for their vehicles do not really get a proper understanding of the scope of insurance cover. There is limited coverage for the owner of the vehicle who becomes first party and in accidents caused by other vehicles, third party vehicles if they do not have insurance, the victim has to undergo long ordeal. The third party vehicle owner and driver are legally liable to compensate, which depends on the network. Lok Adalats are held to expedite settlement, but if the parties or their counsels do not use it, regular adjudication takes its own time. These are cases which should be brought within time limits for finalisation by Judiciary. Then only interests of the public will be protected.


ponmurugan
நவ 01, 2025 10:40

போலீஸ், இன்சூரன்ஸ், இவர்களுக்கு நல்ல வேட்டை


RRR
நவ 01, 2025 09:52

சிறு, பெரு நகரங்களின் உள்ளேயேயும், கிராமங்களிலும் தரமற்ற குண்டும் குழியுமாக உள்ள பல சாலைகள் வாகனங்கள் ஓட்டுவதற்கே யோக்கியதை இல்லாத நிலையில் உள்ளனவே... அதுக்கெல்லாம் அரசுக்கு அபராதம் இல்லீங்களா யுவர் ஹானர்... சாலைகளை தரமானதாக பராமரிக்க வக்கில்லை... சும்மா ஹெல்மெட் போடு, இன்சூரன்ஸ் எடுன்னுட்டு வந்துர்றானுங்க...


Gokul Krishnan
நவ 01, 2025 09:52

1996 இல் நடந்த விபத்திற்கு 2025 வர தீர்வு இல்லை பாதிக்கப்பட்ட அவருக்கு காப்பீடு கிடைத்ததா? நல்ல சட்டம்


அப்பாவி
நவ 01, 2025 07:15

இந்தியாவில்.காப்பீடு என்பது பிரிமியம் வாங்கி கொட்டிக்கிற வரைதான். இழப்பீடுக்கு ஆயிரம் முறையீடு, சர்டிபிகேட், சாட்சி, சம்மன்னு குடுக்கணும்.


sasikumaren
நவ 01, 2025 07:13

காப்பீடு இன்றி போகும் வாகனங்களின் அது ஒரு பக்கம் போகட்டும் அதற்கு முன்பு விபத்தில் அடி பட்டவருக்கு உரிய முறையில் மருத்துவமனை சிகிச்சை கொடுக்க சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் விபத்தை ஏற்படுத்திய நபர் சரியான முறையில் காப்பீடு கட்டததால் விபத்தில் சிக்கியவருக்கு இன்னும் காப்பீடு பலன் கிடைக்கவில்லை தனியார் காப்பீட்டு பணம் எந்த காரணமும் இன்றி மூன்று வருடங்கள் ஆன பிறகும் காப்பீட்டு பணம் கிடைக்கவில்லை இதையேல்லாம் யார் தட்டி கேட்பது


ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 07:04

காப்பீட்டினால் லாபமடைவது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே. விபத்துக்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்பட்டு அலைய, இன்சூரன்ஸ் ஃப்ராடு செய்பவர்களுடன் சேர்ந்து அந்நிறுவனத்திலுள்ளோர் அடிக்கும் கொள்ளை ஏராளம். அந்த கொள்ளையில் நீதித்துறையின் பங்கு மற்றும் கூட்டு ஒரு இருட்டு உலகம். அந்த பூனைக்கு மணி கட்டுவதை விட்டு, இன்சூரன்ஸ் ஃப்ராடை வளர்க்கவே இந்த அறிவுரை.


Alphonse Mariaa
நவ 01, 2025 06:46

26 வருடமா ஒரு காப்பீடு தொகை பெற


புதிய வீடியோ