உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!

பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!

நமது சிறப்பு நிருபர்

பீஹார் தேர்தலில் தேஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 202 தொகுதிகளை கைப்பற்றியது. இண்டி கூட்டணி கட்சிகள், முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை கணிசமாக இழந்துள்ளன. ராகுல் தெரிவித்த ஓட்டுத்திருட்டு புகார், இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் துாள் துாளாகியுள்ளது.பீஹார் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் தேஜ கூட்டணி ஒரு அணியாகவும், இண்டி கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனியாக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z86ybqsf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 122 இடங்கள் மட்டும் போதுமானது.தேஜ கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ( பாஜ -89, ஐஜத-85, லோக் ஜனசக்தி -19, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா-5 அடக்கம்) இண்டி கூட்டணி கட்சிகள், கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற இடங்களையும் இழந்துள்ளன. வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று்ளன. அதில்( ஆர்ஜேடி -25, காங்கிரஸ் -6, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா -4) அடங்கும்) ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெற்றன.பீஹார் மாநில தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஓட்டுத்திருட்டு புகாரை பெரிதாக முன்னிலைப்படுத்தினார். லட்சக்கணக்கான வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. எனினும், ராகுல் அந்த புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவர் தெரிவித்த புகார்களை, பீஹார் மாநில வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுவதாக உள்ளன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

theruvasagan
நவ 15, 2025 00:03

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்கிறார்போல இங்கே சனாதனத்தையும் இந்தியையும் வடக்கர்களையும் வாய்க்கு வந்தபடி பேசிய கட்சியின் தலைவரை தனக்கு ஆதரவாக பிராசாரம் செய்ய கூப்பிட்டு சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் தேஜஸ்வி. அந்த தவறுக்கு பீகார் வாக்காளர்கள் இண்டி கூட்டணியை வச்சு செஞ்சுட்டாங்க.


T.Senthilsigamani
நவ 14, 2025 21:52

இப்போது நிதிஷ் தலைமையிலான பிஜேபி கூட்டணி வெறறி பெற்றாலும் இவர்களின் போலி மத சார்பின்மை அரசியல், மண்ணை கவ்வியது என்று ஒப்பு கொள்ளமாட்டார்கள்.இது தான் நிதர்சனம். இந்தியாவின் சாபக்கேடு இந்த போலி மத சார்பின்மை வாதம்


Venugopal S
நவ 14, 2025 20:58

பீகார் மக்களுக்கு மதம் பிடித்து விட்டது!


மனிதன்
நவ 14, 2025 19:00

இது மக்கள் கொடுத்த தீர்ப்பல்ல, தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பு.... நாடே நாசமா போய்ட்டிருக்கு....துணை முதல்வர், MP ,MLA, என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் பாஜகவினரை செல்லும் இடமெல்லாம் அடித்து விரட்டினார்கள் மக்கள் இருந்தும் பாஜக வெற்றிபெற்றதாம்... முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலெல்லாம் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது எனும்போதே தெரிகிறது தேர்தல் ஆணையத்தின் லட்சணம், CCTV காட்சிகளை அதற்குள் அவசர அவசரமாக நீக்கவேண்டிய அவசியமென்ன???? பிறகு எதற்காக அது வைக்கப் பட்டது......மக்கள் புரட்சி ஆரம்பித்தால் துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடவேண்டிவரும்...


Anandhan
நவ 14, 2025 20:11

ஓ தமிழ் நாட்டில் கொடுத்த மாதிரி தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பா?


சந்திரன்
நவ 14, 2025 20:24

இனி உன் கதறல் சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கும்


ஆரூர் ரங்
நவ 14, 2025 21:48

முத்தலாக் தடைச்சட்டமும் மதுவிலக்கும் அம்மாநில முஸ்லிம் பெண்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் முடிவை மாற்றிவிட்டது.


Venkat esh
நவ 14, 2025 21:55

பத்தாது....பத்தாது.... இன்னும் கதறி உன்னை போன்ற மானங்கெட்ட கூட்டம் புலம்ப வேண்டும்...தொடர்ந்து தோத்து போகிறோமே.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஓட்டு திருட்டு என்று ஒப்பாரி வைத்தாலும்..... ஊஊஊஊஊஊ தான்


Oviya Vijay
நவ 14, 2025 17:59

2026 தமிழக தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தை ஆச்சர்யமாகப் பார்க்கும்... மற்ற மாநிலங்களில் பாஜக தன்னுடைய மாயாஜாலத்தை காட்டினாலும் அவர்களது ஜாலம் தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை என்பதினால் தான் அந்த ஆச்சரியம்...


vivek
நவ 14, 2025 20:26

இதயம் பத்திரம் ஓவியரே.....கொஞ்ச நாள் ஆளை காணோம்...இருநூறுவரலையா


Modisha
நவ 14, 2025 21:08

நல்லவர்கள் எல்லாம் பிஜேபி பக்கம் . தமிழர்கள் ?


Subramaniyan Narayanamoorthy
நவ 14, 2025 16:52

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து உச்ச நீதி மன்றத்தில் இனி வழக்கு தொடர்ந்த கட்சிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், பீஹார் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஓட்டு திருட்டு என்று பிரச்சாரம் செய்த கட்சிகள் இனி என்ன செய்ய போகிறார்கள். இருக்கவே இருக்கு. மின்னணு வாக்கு இயந்திரத்தை வைத்து வெற்றி பெற்று விட்டார்கள் என்று குற்றம் சொல்வார்களா


Nanchilguru
நவ 14, 2025 16:40

பிரதமரோட அம்மாவையும் சேர்த்து இழிவு படுத்தியதற்கு கிடைத்த தண்டனை


Saroja Sivaram
நவ 14, 2025 15:10

உண்மைகள் ஊர்வலம் பிரம்மாண்டமாய்,மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக ,எண்ணிலடங்காத அளவுக்கு பிரமாண்டமாக வரும் நாள் கண்களில் தெரிகிறது.


Barakat Ali
நவ 14, 2025 15:01

மக்கள் காங்கிரஸையோ, ஆர் ஜெ டி யையோ நம்பலை ....... முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது ......


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 14, 2025 14:45

திருடன் திருட்டு பொய் என்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியினராலும் இண்டி கூட்டணி கட்சியினராலும் மிக அதிகமாக கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின் வந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிகமாக பயன்படுத்தினார்கள். அதற்கு பின் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து கொண்டு போகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை