உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா அழைத்து வரப்பட்டார் பயங்கரவாதி தஹாவூர் ராணா; திகார் சிறையில் அடைக்க திட்டம்

இந்தியா அழைத்து வரப்பட்டார் பயங்கரவாதி தஹாவூர் ராணா; திகார் சிறையில் அடைக்க திட்டம்

புதுடில்லி: ''அமெரிக்காவில் இருந்து இன்று (ஏப்ரல் 10) இந்தியாவுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா அழைத்து வரப்பட்டார். பயங்கரவாதி தஹாவூர் ராணா திகார் சிறையில் அடைக்கப்படுவார் என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008 நவம்பரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர்.பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்புக்கும் உதவியதாக, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவரும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ல், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்கா விடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது.இது தொடர்பான மனுவை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தன. தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வர, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர்.நேற்று, நம் அதிகாரிகளிடம் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். சட்ட நடைமுறைகள் முடிந்து, அவரை தனி விமானத்தில் நம் அதிகாரிகள் அழைத்து வருகின்றனர். அவர் இன்று (ஏப்ரல் 10) மதியம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டார். ராணா திகார் சிறையில் அடைக்கப்படுவார் என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லி திகார் சிறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அமித்ஷா பெருமிதம்

''தஹாவூர் ராணாவை நாடு கடத்தியது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும். விசாரணை மற்றும் தண்டனையை எதிர்கொள்ள அவர் இங்கு கொண்டு அழைத்து வரப்படுகிறார்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

C.SRIRAM
ஏப் 10, 2025 20:48

அசைவத்தை கண்ணில் கூட காட்டக்கூடாது. ஆடு மாடு திங்கும் இலை தழைகளை மட்டும் உணவாக கொடுக்கவும் . மூன்று வேளையும் .


Krishnamurthy Venkatesan
ஏப் 10, 2025 19:32

இங்குள்ளவர்களில் சிலர் இவரை சுதந்திர போராட்ட வீரன் அளவில் பிரச்சாரம் செய்வார்கள். அத்தகையோரை தேச துரோக வழக்கு போட்டு சிறைக்குள் தள்ள வேண்டும்.


என்றும் இந்தியன்
ஏப் 10, 2025 17:10

இதனால் ஒரு புண்ணியமில்லை. மும்பையில் 2008 நவம்பரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் லஷ்கர் அமைப்பு, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவரும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணாவும். மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ல், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்கா விடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது. 2008 ல் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் அமெரிக்க + கனடா நாட்டு குடியுரிமை மக்களால். இன்று 17 வருடம் ஆகிவிட்டது அமெரிக்காவில் விடுதலை செய்வதற்கு பதிலாக அமெரிக்காவில் official ஆக விடுதலை ஆனால் உண்மை என்ன 17 வருடம் ஆகிவிட்டது ஆகவே ரிலீஸ்???நடந்தது இந்தியாவில் ஆனால் வழக்கு நடக்குமாம் அமெரிக்காவில் அங்கே தண்டனை தருவார்களாம்???ஆக மொத்தம் நீதிமன்றம் அறிவற்ற ஒரு குழுமம் சேர்ந்து ஒரு அறிவு பூர்வமான ஆணை நிச்சயிக்கும் இடம்???? நடந்தது இந்தியாவில் வழக்கு இந்தியாவில் தண்டனை இந்தியாவில் இருக்கவேண்டும். இந்த சுய அறிவு கூட இல்லையா நீதிமன்றங்களுக்கு. ஒருத்தன் அமெரிக்கானாம் இன்னொருத்தன் கனடாவாம் ஆகவே வழக்கு அமெரிக்காவில் விசாரணை செய்து அங்கே நீதி தருவார்களாம் இந்தியாவில் 166 பேரை கொலை செய்த இவர்களுக்கு.


hariharan
ஏப் 10, 2025 16:18

இவனையும் நம்ம ஊர்ல நாலு பேர் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கானு. அவனுகளையும் இவனோடு ஒரே ரரூம் போடுங்க. ஆனால் அதுக்குள்ள அதுல ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லாம இருக்கு.


கத்தரிக்காய் வியாபாரி
ஏப் 10, 2025 16:02

உள்ள தூக்கிப்போட்டுட்டு, ஒரு வேலை சாப்பாடோட ஒரு மூணு மாசம் விட்டுடுங்க அப்புறம் விசாரித்தால் எல்லாம் சொல்லிடுவான்.


Krishnamurthy Venkatesan
ஏப் 10, 2025 19:36

குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தரப்படும் உணவு என்பது நாட்டில் உள்ள பல ஏழை எளியவர்களுக்கு கிடைக்காத 5 ஸ்டார் range உணவு நம் வரி பணத்தில் இருந்து தரப்படுகின்றது என்பதே உண்மை.


Sudha
ஏப் 10, 2025 13:59

தீவிரவாத தலைநகர் டெல்லி என்று சரித்திரத்தில் எழுதி வைக்கலாம்?. அது என்ன திகார் அவ்வளவு ஸ்பெஷல்?


Rasheel
ஏப் 10, 2025 13:58

ஜிஹாதி தீவிரவாதம் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு உதவ பெட்ரோலிய நாடுகள் உள்ளன. இங்கு நடமாடும் பல பேர் அதற்கு நேராகவோ மறைமுகமாகவோ உதவுகின்றனர். நாட்டின் கிழக்கு மாநிலங்கள், அரசியல் வியாதிகள் ஆதார் முதல் அனைத்தையும் கொடுத்து அதை ஊக்குவிப்பது நாடு அறிந்ததே. நீங்கள் செலவு செய்யும் ஒவ்வரு பைசாவிலும் தீவிரவாதிகளுக்கு சேரும் பணம், தேச விரோத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்த படுகிறது. இது பிரியாணி மளிகை சாமான், மட்டன் முதல் தங்கம் வரை அடங்கும்.


Mr Krish Tamilnadu
ஏப் 10, 2025 13:00

தீவிரவாதம் நாடி, நரம்பு, உணர்வில் உரியவர்கள் மண்ணில் வாழ தகுதி அற்றவர்கள், விஷ ஜந்துவை கூண்டில் வைத்து, பாதுகாப்பது வேண்டாத வேலை. சரியான காரணங்களுடன் நசுக்கி விடுவது நல்லது.


Thetamilan
ஏப் 10, 2025 12:17

மகா மட்டமான இடத்திற்கு கொண்டுசென்றுவிட்டது


Ramesh Sargam
ஏப் 10, 2025 12:14

இந்தியாவுக்கு அழைத்துவரவேண்டாம். அமெரிக்காவில் உள்ள Alcatraz Prison உள்ளேயே அடைத்து இவன் கதையை முடிக்கவும்.


முக்கிய வீடியோ