உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது : பரூக் அப்துல்லா

காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது : பரூக் அப்துல்லா

பஹல்காம்: காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துார் போர் நடவடிக்கை மூலம் தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த போர் பதற்ற சூழ்நிலை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தில் சுற்றுலா பாதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் பஹல்காம் சுற்றுலாப்பகுதிக்கு பரூக் அப்துல்லா இன்று சென்று கோல்ப் விளையாடினார். அதன் பிறகு பரூக் அப்துல்லா கூறியதாவது:காஷ்மீரில் பயத்தின் சூழல் குறைந்துள்ளது. இதன் காரணமாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் பள்ளத்தாக்குக்குச் சென்று அதன் அழகை அனுபவிக்க வேண்டும்.ஜம்மு-காஷ்மீருக்குச் செல்வதற்கு எதிராக சில நாடுகள் பிறப்பித்த எதிர்மறை பயண ஆலோசனைகளை ரத்து செய்ய, வெளியுறவு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் முயற்சிகள் அவசியம்.இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மே 27, 2025 20:18

பயம் குறைந்துள்ளது என்பது சந்தோஷமா, அல்லது வருத்தமா?


SENTHIL NATHAN
மே 27, 2025 19:35

ஊர் சுற்றுவது பெருசா? உயிரோடு இருப்பது பெருசா??


karthik
மே 27, 2025 17:23

காஷ்மீர் இந்த அளவிற்கு மோசமானதற்கு காரணமே இவன் குடும்பம் தான் அதை பற்றி எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவர்களால் எப்படித்தான் வாழமுடிகிறதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை