உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்தனால் கலந்த பெட்ரோல்; இலக்கு எட்டி விட்டதாக மத்திய அரசு தகவல்

எத்தனால் கலந்த பெட்ரோல்; இலக்கு எட்டி விட்டதாக மத்திய அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெட்ரோலில், 20 சதவீதம் அளவுக்கு எத்தனாலை கலக்கும் இலக்கை நெருங்கி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ராஜ்யசபாவில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நேற்று கூறியதாவது:கரும்புச்சாறு, சர்க்கரை போன்ற கரும்பு சார்ந்த பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட வீணாகும் உணவு தானியங்களில் இருந்து பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால், தயாரிக்கப்படுகிறது. எண்ணெய் தேவையை கருத்தில் வைத்து, பெட்ரோலில் எத்தனாலை கலப்பதற்கான அனுமதி மற்றும் அளவீடு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலப்பதற்கு கடந்த 2022-ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 2022-ல், 10 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்தன. இந்த அளவு படிப்படியாக அதிகரித்து, 2025, பிப்ரவரி நிலவரப்படி, 19.68 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ளன. இதற்காக கடந்த 4 மாதங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 280 கோடி லிட்டர் எத்தனால் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

अप्पावी
மார் 20, 2025 07:49

எனக்கு என்னவோ இந்த எத்தனாலை அளவுக்கு அதிகமாக கலப்பதால்தான் வண்டிங்க தானே பத்திக்கிட்டு எரியுதோன்னு தோணுது. அமெரிக்காவில் 10 பர்சண்ட்தான் கலப்பாங்க. இங்கே சில தத்திகள் முன் பின் யோசிக்காம 50 சதவீதம் வரை கலந்துடறாங்களோ? கேட்டா, உலகத்துக்கே வழி காட்டறேன்னு மெடல் குத்திப்பாங்க.


செல்வா
மார் 20, 2025 17:23

யப்பா, அப்பாவி உன் அறிவக்கண்டு நான் வியக்கிறேன். கொஞ்சமாவது படிங்க!


nb
மார் 20, 2025 06:09

அப்ப பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை