வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பிச்சையை கூப்பிட்டு விழா நடத்தலாம்.
Google map பயன்படுத்தும் போது நம்முடைய சொந்த அறிவையும் பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் இப்படி தான் நடக்கும்.
அந்த இடத்தில் உள்ள தடைகள், வானிலை, சாட்டிலைட் தாக்கம் ஆகியவற்றைப் பொறுத்து கூகுளை மாப்ஸ் உடைய வழிகாட்டி துல்லியம் மாறுபடும். நம்முடைய சொந்த அறிவையும் உபயோகப்படுத்த வேண்டும் .
பெரும்பாலும் கேரளா முழுவதும் மலைகளும், பள்ளதாக்குகளும், பள்ளம், மேடுகளும் நிறைந்த பகுதி. சீரான நிலம் உள்ள பகுதிகள் மிகவும் குறைவு. ஆகவே, கூகுளை நம்பி இறங்க கூடாது. கூகுளுக்கு பள்ளம், மேடு, மலை எல்லாம் தெரியாது.
தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி மாவட்ட மற்றும் கிராம சாலைகளில் கூட வழிகாட்டி பலகைகள் உள்ளன ..அப்புறம் எதற்கு கூகிள் ? வாய் இருக்கிறதே , வழி கேட்க முடியாதா ? இவர்களாக கூகிளை நம்பி பள்ளத்தில் விழுந்தால் அதற்கு இவர்கள்தான் பொறுப்பே தவிர .............
கூகுளை 100 சதவீதம் நம்பாமல் அக்கம் பக்கம் விசாரித்து தான் செல்லவேண்டும். சில நேரங்களில் ரோடே இல்லாத இடங்களில் வழி இருப்பதாகவே கூகிள் காட்டும். அப்போதுதான் இதுபோல அசம்பாவிதங்கள் நடக்கிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட வழிகளையும் அது இப்பவும் இருப்பதாக காட்டும்
ஒரு முறை நாங்கள் காளஹஸ்தியில் இருந்து திருப்பதி வழியாக பெங்களூர் செல்ல விழைந்த போது கோவில் வழி நடத்தி கூகுள் எங்களை காய்கறி மார்க்கெட்டில் நுழைந்து அடுத்த தெருவில் செல்ல வழி காண்பித்தது! எங்கள் பெரிய ஹோண்டா கார் மார்க்கெட்டில் நுழைந்து வெளியே வருவதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் பிடித்தது! அங்கு நல்ல மனிதர் ஒருவர் நிறுத்தி இருந்த வாகனங்களை அகற்றி வழி ஏற்படுத்தி தந்தார் - இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க மாநகராட்சி கூகுள் உபயோகிப்போர் மாற்றுப் பாதையில் செல்லவும் என்று ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் அனைவருக்கும் நல்லது!
யாரிடமாவது கேட்டு போக வேண்டியதுதானே மேப்ப பாத்து தான் ஓட்டனுமா
கூகிள் map பார்த்துதான் uber ola டிரைவர்கள் ஓட்டுக்கிறார்கள் ஆனால் எந்த அசம்பாவிதமும் நடப்பதிலை காரணம் அதற்கு எற்றார் போல் மொபைல் போன் செட்டப் உள்ளது....... அது இல்லாத போது அருகில் உள்ளவர் அந்த map ஐ பார்த்து வழி சொல்லியிருக்க வேண்டும்...... எல்லோரும் குறட்டை விட்டு தூங்கினால் அப்புறம் இப்படித்தான் ஆகும்
////கூகிள் map பார்த்துதான் uber ola டிரைவர்கள் ஓட்டுக்கிறார்கள் ஆனால் எந்த அசம்பாவிதமும் நடப்பதிலை -// uber ola வாகனங்கள் ஓடுவது சென்னை போன்ற சிட்டியில்... அது சமவெளி பிரதேசம்... இவர்கள் சென்றது மலையும் மலைச்சார்ந்த இடமான கேரள மாநிலம்... ரொம்ப அதிகம் படிச்சா புத்தி பேதலிச்சிடும்”..னு பெரியவங்க சொல்வாங்க... அதுக்கு காரணம், மதயானைக்கு மதம் பிடிப்பதைப் போல படித்துவிட்ட கர்வமும், தலைக்கணமும், திமிரும் மூளையிலும், புத்தியிலும் ஏறிவிடும். அதுனால கண்மண் தெரியாம... கூகுள் மேப்..தான் புத்திசாலின்..னு உன்னைப் போன்ற மெத்த படித்த மேதாவிகள் நினைத்தன் விளைவுதான், இரண்டு மரணமும், பதினைந்துபேர் படுகாயமும். போகிற வழியில் உள்ள கிராமம் மற்றும் ஊர்களில் உள்ள மக்களிடம் நின்று வழி கேட்டால்... உங்க வீட்டு சொத்து குறைஞ்சிடுமா.. இல்ல... அவர்களிடம் கேட்பது கௌரவ குறைச்சலா? இதுமாதிரிதான் கடந்த வாரம், சென்னை அடுத்த புழலில்... படிச்ச அறிவாளியான என் உறவினருடன் ஒரு தொழிற்சாலை முகவரி தேடி சென்றேன்... அவனோ கூகுளை நம்பினான்.... நான் அப்போதே சொன்னேன்... சாலையில் உள்ள அந்த ஊரில் உள்ள கடையிலோ அல்லது குடியிருக்கும் மக்களிடமோ வழி கேட்டு போகலாம்..னு கேட்டேன்... என் உறவினனோ.. படித்துவிட்டோம் என்ற திமிரும், கையில் மொபைல் உள்ள ஆணவமும், “செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்”ங்ற வடிவேல் காமெடி கதையா.. கூகுள் மேப் இருக்குற தைரியத்துல... போய்ட்டேன் இருக்கான், லெப்ட், ரைட்டு, ஸ்ட்ரையிட்...டுன்னு ஒரே இடத்தில் சுத்தி சுத்தி வந்துட்டிருக்கான்... எனக்கு கோபம் பொத்து கொண்டு வந்து காரைவிட்டு இறங்கி கோபத்தில் கத்திவிட்டு... தெருமுனையில் இருந்த ஒரு வீட்டில் உள்ள பெரியவரிடம் வழி கேட்டேன்... தம்பி, நீங்க இந்த பக்கம் வந்தது தப்பு... நீங்க வந்த கொல்கத்தா பிரதான சாலையில் எதிர்புறம் போனால் அங்குதான் நீங்கள் குறிப்பிடும் தொழிற்சாலை இருக்கு...?...ன்னு விளக்கமா வழியை சொன்னார்... இந்த கிறுக்கனோ... “இல்லையே கூகுள் மேப் இந்த ரோடு வழியைத்தான் காட்டுது..ன்னு” அந்த பெரியவரிடம் வியாக்கினாம் பேசி விவாதம் செய்தான்.. எனக்கு பயங்கர கோபம் வந்து... “எல்லாம் தெரியும்னு படிச்சுட்டு உலாத்துற உன்ன மாதிரி தலைக்கணமும், திமிரும் உள்ள தறுதலைகூட வந்தது தப்பா போச்சு... காரை நிறுத்தி அங்கிருக்கும் மனிதர்களிடம் வழியை கேட்பதை விட்டுவிட்டு... கூகுள்மேப்பில் வழி தேடுறியே..? அறிவில்லடா”.. திட்டிய பிறகு.. அந்த பெரியவர் சொன்ன வழியில் சென்ற பின்னர் சரியான இடத்தை அடைந்தோம்... அதுபோல...இந்த கூகுள் மேப்..பை நம்பினவனுங்களுக்கு இதுபோல சொர்க்கம், நரகத்திற்குத்தான் போய் சேருவார்கள்...
ஒரு கிராம பாதையில் இரு வழித்தடங்கள் இருக்கும் குறைந்த தூரத்தை கூகுல் காட்டும் ஆனால் அது குறுகலான வழியாக இருக்கும்.