உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை சுரண்டும் தமிழக அரசு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்

ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை சுரண்டும் தமிழக அரசு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்

புதுடில்லி: 'இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது; நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?' என, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் நர்ஸ்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நிரந்தரமாக நியமிக்கப்படும் நர்ஸ்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் குறைவான சம்பளத்தில் இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வை வழங்கக்கோரி நர்ஸ்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சம வேலைக்கு; சம ஊதியம் என்ற அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு நிரந்தர நர்ஸ்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை' எனக் கூறி, அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத். சந்திப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, 2,000 நாட்களுக்கு மேல் ஆகிறது. அதை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளீர்கள்?' என, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நர்ஸ்கள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் திட்டத்தை நாங்கள் சார்ந்து இருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ், 440 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் தமிழக அரசுக்கு வழங்காமல் இருக்கிறது. அந்த நிதி கிடைத்தால் தான் எங்களால் நர்ஸ்களுக்கு முழு ஊதியங்களை வழங்க முடியும்' என்றார். இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள் கூறியதாவது: நர்ஸ்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு தேவைப்படுகிறது என்றால் நீங்களாகவே தனியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்த வேண்டியது தானே. உங்களுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்குவது உங்கள் கடமை. அதை நீங்கள் எந்த சூழலிலும் தட்டிக் கழிக்க முடியாது. குறிப்பாக, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக நர்ஸ்களை நிரந்தர பணி நியமனம் செய்யாமல் உள்ளீர்கள். இலவசங்களை கொடுக்க மட்டும் உங்களுக்கு பணம் இருக்கிறது; ஆனால் நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பதை எங்களிடம் கூறுங்கள். தமிழக அரசு அனைத்திலும் வளர்ந்த மாநிலம், பொருளாதார ரீதியிலும் செல்வாக்கு மிக்க மாநிலமாகத்தான் இருக்கிறது என சொல்கிறீர்கள்.ஆனால் சேவை செய்யும் நர்ஸ்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். இதை கண்டிப்பாகஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.பிறகு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் மத்திய அரசையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்' என்றார். இதையடுத்து, 'இந்த விவகாரத்தில் மத்திய அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Indian
செப் 25, 2025 13:22

இரண்டு வாரங்களாக சுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கறாங்க ..உள்குத்து ஏதாவது நடக்குதா ..


P.M.E.Raj
செப் 25, 2025 13:15

தமிழக அரசு எல்லாத்துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தெரியவில்லை. செவிலியர்களுக்கு சம்பளம் தருவதில்லை. பயிற்சி மருத்துவர்களுக்கும் சம்பளம் தருவதே கிடையாது. மாறாக 24 மணிநேரமும் பணிச்சுமை. வரைமுறை இல்லாமல் கொள்ளை அடிப்பதையே திமுகவின் கொள்கை . சிலை வைக்க பணம் உள்ளது. சம்பளம் தர பணமில்லை. ஏதாவது கேட்டாள் மத்திய அரசு பணம்தரவில்லை என்று கதை அளப்பது.


Indian
செப் 25, 2025 13:14

அரசாங்கமே மது விற்பனை செய்து ஏழை எளியவர்களின் கல்லீரலை சுரண்டுகிறார்கள்


Ramesh Sargam
செப் 25, 2025 12:31

கல்லுக்காக மலையை சுரண்டினார்கள், வீடு கட்ட ஆற்று மணலை சுரண்டினார்கள். G-Square போன்றவர்கள் பல அடுக்கு கட்டிடங்கள் கட்ட ஏரிகளையும், விவசாய நிலங்களையும் சுரண்டினார்கள். இப்பொழுது ஒப்பந்த நர்ஸ்கள் உழைப்பை சுரண்டுகிறார்கள். சுரண்டுவதே இந்த திமுக ஆட்சியின் தலையாய பணியாக உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம் அடைந்தால் மட்டும் போதாது. சட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு சரியான பாட்டம் காட்ட வேண்டும்.


Balasubramanian
செப் 25, 2025 11:40

வழக்கு என்றால் மத்திய அரசு நிதி வேண்டும், கருணாநிதி சிலை என்றால்? யார் நிதி வேண்டும்? அதற்கு தமிழக அரசின் நிதி? நிதி வம்சத்தினர் நிதியை மட்டும் பதுக்க வேண்டும், பெருக்க வேண்டும்!


Barakat Ali
செப் 25, 2025 10:50

திருட்டுக்கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் பல .........


vbs manian
செப் 25, 2025 10:38

செவிலியர்கள் பெரிய வோட்டுவங்கி இல்லை.


Mettai* Tamil
செப் 25, 2025 10:20

சிலை வைக்க பணம் இருக்கு, மணிமண்டபம் கட்ட பணம் இருக்கு, ரேஸ் நடத்த பணம் இருக்கு, மாநாடு நடத்த பணம் இருக்கு, ஆனா நர்ஸுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் பணம் இல்லை .....


NellaiBaskar
செப் 25, 2025 09:41

திமுக வின் ... கேட்டுக் கொள்ளுங்கள்.


Ram
செப் 25, 2025 09:32

மக்களை சுரண்டி, கோவில்களை சுரண்டி வாழ்வது திராவிட திருடர்களின் வாடிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை