உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமானது. டில்லியில் நவ.,10ம் தேதி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான டாக்டர் முசம்மில், டாக்டர் அதீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் ஆகியோர் கூட்டாக, 20 லட்சம் ரூபாய் ரொக்கமாக திரட்டி, அதை உமரிடம் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்தக் குழு குருகிராம், நுஹ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 20 குவிண்டால்களுக்கு உரத்தை வாங்கி இருக்கிறது.உமருக்கும் டாக்டர் முசம்மிலுக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டு உள்ளது.கூடுதலாக, உமர் சிக்னல் செயலியில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 2-4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியது விசாரணையில் தெரிய வந்தது.இதற்கிடையே டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்தம் எட்டு பேர் தலா இரண்டு பேராக, சென்று 4 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்தது என்ஐஏ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டில்லி குண்டு வெ டிப்பு தொடர்பாக, கான்பூரை சேர்ந்த முகமது ஆரிப் என்ற மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்த முதலாமாண்டு இருதய சிக்கிச்சை பிரிவு மாணவரான இவர், நேற்று மாலை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் கடந்த 3 மாதங்களாக இங்கு படித்து வருகிறார். வெளியில் தங்கி, தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிந்தனை
நவ 13, 2025 21:05

அவர்களுக்கு நிதி அணைத்து அளித்த அனைவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்


Venugopal, S
நவ 13, 2025 20:29

எங்கே வாடகை வாயன் ஒருத்தன் கூட காணோம்...ஹமாஸ்சுக்கு குரல் வருது, இந்தியன் அப்படினா இவனுங்க வாய் ஊமை ஆகிவிடும்...இவனுங்களை மொத்தமாக உள்ளே தள்ளி நான்கு கவனிக்க வேண்டும்.


Modisha
நவ 13, 2025 17:11

நாய்கள் .


Rathna
நவ 13, 2025 16:35

அல் பலாஹ் என்ற யூனிவர்சிட்டி - ஒரு பல்கலைக்கழகமே தீவிரவாத கூடமாக மாற்றப்பட்டு உள்ளது. வெளியில் வாங்கிய வெடி மருந்தை யூனிவர்சிட்டி லேபில் வைத்து வெடிக்கிறது என்று டெஸ்ட் செய்து உள்ளனர். உள்ளே காலேஜ் ஹாஸ்டலில் திட்டம் தீட்டி உள்ளனர். இதே பெயரில் ஒரு டிரஸ்ட் ஒன்று பல இடங்களில் நடந்து வருகிறது. டிரஸ்ட் பெயரில் பணத்தை மடைமாற்றி தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். இதிலே குண்டு வைத்து நரகம் போன தீவிரவாதியின் மனைவி பாக்கிஸ்தான் தீவிரவாதி மசூதி அஸர் என்பவனின் அக்கா மக்கள். எப்படி தான் அரசாங்கம் பாகிஸ்தானிய தீவிரவாதி உறவுகளுக்கு விசா கொடுத்து இங்கே திருமணம் செய்ய அனுமதி வழங்குகிறதோ. இத்தனை வருடங்களாக தீவிரவாதம் நடக்கும் ஒரு பல்கலையில் நடக்கும் விவகாரத்தை உள்ளூர் போலீஸ் எப்படி கண்டுகொள்ளாமல் இருந்ததோ. இதிலே சில பேர் எல்லா மதமும் அமைதியே போதிக்கிறது என்று வருவான் பாருங்கள். முட்டு கொடுக்க எவ்வளவு பேர் வருவான் என்பதை பாருங்கள்.


mganesan
நவ 13, 2025 15:39

வெடி விபத்து என்று சொல்லுவோம்


Ram pollachi
நவ 13, 2025 15:12

நாம் வசிக்கும் தெருவில் நிற்கும் பல கார்களுக்கு ஆர் சி புத்தகம், காப்பீடு எதுவுமே இருக்காது அதன் உரிமையும் மாற்றாமல் விற்றவர் பெயரில் இருக்கும்... இது போல் பிரச்சினை வரும் போது தான் உண்மை தெரிய வரும்.... வெளிமாநில, பிற மாவட்டத்தை சேர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் கோவையை வட்டமடித்து கொண்டு உள்ளது... அலட்சியம் இல்லாத கண்காணிப்பு அவசியம்...


Shekar
நவ 13, 2025 14:37

இந்துத்வா ஒழிக, மத வெறி பிஜேபி, அர் எஸ் எஸ் ஒழிக. மத நல்லிணக்க PFI அது சார்ந்த அமைப்புகளும் வாழ்க.... இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மக்கள் பைதியக்காரகளாக இருப்பார்களோ தெரியவில்லை


duruvasar
நவ 13, 2025 14:28

மிருகங்களை கொன்றுதான் பிடிக்கவேண்டுமென்றால் அதை செய்யத்தான் வேண்டும்.


Marai Nayagan
நவ 13, 2025 14:13

காங்கிரசும் திமுகவும் குண்டு வைத்த அவ‌ர்க‌ளை ஓட்டுக்காக கண்டிக்க மாட்டார்கள். மாறாக அரசை குறை சொல்லி அந்த தீவிரவாதத் கூட்டம் ஓட்டு வாங்க முயற்சிப்பார்கள். நாடு கேட்டால் நமக்கென்ன...குடும்பமும், பணமும் ஓட்டும் மட்டுமே அவர்கள் குறிகள்


RAMESH KUMAR R V
நவ 13, 2025 14:12

மனித நேயம் உள்ள எவரும் இதை ஏற்க மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை