உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் டிப்பர் லாரி, கார் மோதி விபத்து: 7 பேர் பரிதாப பலி

ஆந்திராவில் டிப்பர் லாரி, கார் மோதி விபத்து: 7 பேர் பரிதாப பலி

அமராவதி: ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே டிப்பர் லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.மணல் ஏற்றி வந்த லாரி தவறான பாதையில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ''இந்த சம்பவம் தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raj
செப் 17, 2025 17:43

ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே தவிர எந்த அதிகாரியும், அரசாங்கமும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இன்று நடந்து முடிந்தது நாளை மற்றொன்று நடக்கும் வரை அமைதி காக்கும் அரசாங்கள். கேவலம்.


Padmasridharan
செப் 17, 2025 17:19

6-ஆ அல்லது 7-ஆ சாமி. குழந்தை என்பதால் 6 என்கிறீர்களா. . ஆந்திராவில் எந்த இடம்.. எந்த நேரம்.


அப்பாவி
செப் 17, 2025 15:59

புதிய இந்தியா அணு ஆயுதத்திற்கு அஞ்சாது. கதிசக்திக்கு அஞ்சுது. விமான பயணத்துக்கு அஞ்சுது.


R Bramananthan
செப் 17, 2025 15:19

முன்னாள் முதல்வர் என்று தான் செய்தியில் போட்டிருக்கு


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 15:11

இந்த லாரியின் ஓட்டுனருக்கும் ஓனருக்கும் இனி வெளியிலே வராதவாறு சிறை கொடுக்கப்படவேண்டும் சாலையின் சட்டத்திட்டத்தை மதிக்காத மிருகங்களுக்கு எதற்க்கு ஓட்டுநர் உரிமம்


Ramadurai Azhagirisamy
செப் 17, 2025 14:34

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆ???


ஈசன்
செப் 17, 2025 14:30

நீண்ட தூர தேசிய நெடுஞ்சாலைகளில் சர்வ சாதாரணமாக சாலை சட்ட விதிகள் கனரக வாகனங்களால் மீறப்படுகின்றன. அது தான் வழி ஒழுக்கம் (lane discipline). 30-40 km வேகத்தில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் சர்வ சாதாரணமாக, 80-100 km வழிப்பாதையில் செல்கின்றன. பின்னால் வரும் சிறிய வாகனங்கள் எவ்வளவு நேரம் ஹாரன் ஒலி எழுப்பினாலும் வழி விடுவதே இல்லை. மேலும் இடப்புறம் சிறு தெருக்களின் வழியே வரும் கனரக வாகனங்கள், வலப்புறம் வராமலும், அருகில் இடப்புறம் உள்ள service road ஐ பயன்படுத்தாமலும், எதிர் திசையில் அதே வழியில், அதாவது இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்க பட்ட வழிகளில் வருவது பல கனரக வாகனங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நெல்லூர் விபத்துக்கு காரணம் இதுவாகவும் இருக்கலாம். பல விபத்துகளுக்கு காரணம் இந்த கனரக வாகனங்களின் முறையற்ற செயல்களால் தான். தேசிய நெடுஞ்சாலை துறை இது போன்ற கனரக வாகன ஓட்டிகளுக்கு மிக அதிக அபராதம் விதித்தால் தான் இது போன்று விபத்துகளை தவிர்க்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை