வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசின் 0 விபத்து எதிர்பார்ப்பு நல்லது தான். அதற்கு சாலைகளை சரியாக பராமரித்தல் மிக மிக அவசியம். அனைவரும் சாலை வரி கட்டுகிறோம். நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுக்கலாமா? தினமலர் இதற்கு ஒரு விழிப்புணர்வு கட்டுரை வெளியிட்டால் வாசகர்களுக்கு சரியான புரிதல் ஏற்படும்.
சென்னை தாம்பரம் முதல் வாலாஜாபாத் வரை உள்ள பகுதி தொழில் வழி தடமாக உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சாலையை கொண்டு தான் தொழில் வளர்ச்சியை பற்றி இந்த அரசு பெருமை பீற்றிக்கொண்டு உள்ளது. இப்போது இந்த சாலையின் நிலை மிகவும் பரிதாபம். மிக மோசமான பராமரிப்பு, இரவு விளக்கு வசதி இன்மை, படப்பை பால பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேறாமை போன்ற நிலைமையை கொண்டுள்ள இந்த சாலையை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் இருக்கும் முதலீடும் வெளியே சென்றுவிடும். இந்த சாலை மட்டுமில்லை எந்த சாலையும், தேசிய நெடுஞ்சாலை உட்பட நல்ல நிலையில் இல்லை என்பது மிகவும் வருத்தம். இவையே விபத்துக்கு முக்கிய காரணம்,