உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம்: ராகுல் பேச்சு

நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம்: ராகுல் பேச்சு

ராஞ்சி: நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இன்று(பிப்.,04) பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்டார். அவரை தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். அப்போது ராகுல் பேசியதாவது: மோடியும், பா.ஜ.,வும் இணைந்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததை கண்டித்து யாத்திரை நடத்துகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uvuvabjg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டை ஒருங்கிணைப்பது எனது நோக்கம். பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,வும் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி அன்பு கடையை திறந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்தது. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக எதிர்த்து நின்றதால் சதி முறியடிக்கப்பட்டது. நாட்டில் பொருளாதார அநீதிகள் நடக்கிறது. மக்களின் சொத்துகள் கார்பரேட் முதலாளிகள் வசமாகிறது. பழங்குடியினரின் காடு, நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் எப்போதும் பாதுகாத்து வருகிறது. நாங்கள் பழங்குடியினருடன் இருக்கிறோம். உங்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பிற்காக 24மணி நேரமும், உழைத்து நீதி கிடைக்க செய்வோம் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சந்திப்பு

யாத்திரையின் போது, தன்பாத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ராகுல் சந்தித்தார். புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நீதிக்கான இந்த மாபெரும் பயணத்தில், அனைவருக்கும் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், அனைவரையும் அழைத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

குமரி குருவி
பிப் 05, 2024 08:55

அட.. பிரிவினைவாதி.. உன் பேச்சையும் கொஞ்சம்பேர் நம்புறான் பாரு அதுக்காக நல்ல பேசு நிறைய பேசு


R SRINIVASAN
பிப் 05, 2024 08:37

இவர் இந்தியாவை ஒருங்கிணைப்பதாக சொல்கிறார். இவர் கட்சியை சேர்ந்தவர்கள் இந்தியாவை வடக்கு தெற்கு என்று பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்


NicoleThomson
பிப் 05, 2024 08:26

வெக்கமா இல்லை, உன்னோட கட்சிக்காரன் கருநாடக துணை முதல்வரின் தம்பி தென் இந்தியாவை பிரித்து விட கூறுகிறான் , நீ இப்படி பேசுகிறாய் , மக்களை என்ன நினைத்து கொண்டுள்ளீர்கள்


J.V. Iyer
பிப் 05, 2024 06:42

முதலில் தமிழக சத்தியமூர்த்தி பவனுக்குள் இருப்பவர்களை ஒருங்கிணைத்தல் காங்கிரஸ் வளரும். காங்கிரெஸ் நூறாக உடைந்து சிதறி இருக்கும்போது இந்த நீரோ மன்னன் பிடில் வாசிக்கிறார். பாப்புவின் வழியே தனி.


ராஜா
பிப் 05, 2024 04:49

கர்நாடகாவில் உள்ள D.K பிரதர்சை கேட்டால் நல்ல ஆலோசனை கிடைக்கும்.


Ramesh Sargam
பிப் 05, 2024 00:23

மொதல்ல உங்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை ஒன்றிணையுங்கள். பிறகு அந்த புள்ளிவைத்த இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை ஒன்றிணையுங்கள். பிறகு நாட்டை ஒன்றிணைப்பதை பார்க்கலாம்.


R.MURALIKRISHNAN
பிப் 05, 2024 00:13

கட்சியை ஒருங்கிணைக்க தெரியாதவனெல்லாம் நாட்டை ...........


S.Ganesan
பிப் 04, 2024 20:07

எந்த நாட்டோடு ஒருங்கிணைக்க போகிறாரோ ? சீனாவா ? இத்தாலியா ?


PalaniKuppuswamy
பிப் 04, 2024 19:45

ஆப்படினா ஒண்ணு செய் பப்பு. உங்க பங்காளிங்க தேச துரோக மூடர் கூட்டம் எல்லோரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வை . வழி தெரியாமல அய்யோ அய்யோ என்று கூவும் உங்க அம்மா வீட்டு கரர்களை இதலிக்கு கூட்டிட்டு போய் விடு . பாரதம் தூய்மையாக்கும் , சாத்வீகம் ஆகும் பழியபடி


panneer selvam
பிப் 04, 2024 19:40

Rahul ji , it is too late . 75 years ago already Vallabhai Patel has done it against all odds d great grandfather Nehru.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை