உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனது வாழ்க்கையை தேசத்திற்கு அர்ப்பணித்தவர் வாஜ்பாய்; பிரதமர் மோடி புகழாரம்

தனது வாழ்க்கையை தேசத்திற்கு அர்ப்பணித்தவர் வாஜ்பாய்; பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த பார்லிமென்ட்வாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த வாஜ்பாய்க்கு 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hdxaop2r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக, பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார். அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், சக்திவாய்ந்த கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, பணி மற்றும் தலைமைத்துவம் நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rathna
டிச 25, 2025 18:20

பிஜேபி, வாஜ்பாய் மற்றும் அத்வானி அவர்களின் தியாகத்தை மறந்து விட கூடாது. அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில் தான் 70 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.


Azar Mufeen
டிச 25, 2025 17:07

வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் காலத்தில் வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம்


Thirumal Kumaresan
டிச 25, 2025 14:54

வாஜிபாய் தன் வாழ்நாளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பதில் யாரும் மாற்று கருது சொல்ல முடியாது.அப்படி சொல்பவன் கண் இருந்தும் குருடன் என்பதே என் கருத்து


RAMAKRISHNAN NATESAN
டிச 25, 2025 11:45

வாஜ்பாயி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளித்து பாஜகவை தமிழகத்திற்கு நன்கு அறிமுகம் செய்த திமுகவுக்கு நன்றி ......


RAMAKRISHNAN NATESAN
டிச 25, 2025 11:43

மத்திய கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஏழை முரசொலி மாறனுக்கு அமெரிக்காவில், அதுவும் மக்களின் வரிப்பணத்தில் சிகிச்சை ...... வாஜ்பாயியை மறக்கவே முடியாது .....


தமிழன் மணி
டிச 25, 2025 10:55

வாஜ்பாய் தன் வாழ்க்கையை தேசத்துக்காக அர்ப்பணித்தார் ஓஹோ அப்போ திருட்டு முன்னேற்றக் கழகத்துடன் எதற்காக கூட்டணி வைத்தார் ஊழல்வாதிகள் திருடனுடன் எந்த நல்ல நேர்மையான கட்சியும் கூட்டணி வைக்காது


ramesh
டிச 25, 2025 11:23

பிஜேபி உடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா 13 மாதத்தில் விஷ்ணு பகவத் என்ற சப்பை காரணத்தை சொல்லி சோனியாவுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சியை கவிழ்த்தார். 1 ஓட்டில் பிஜேபி ஆட்சியை இழந்தது. அப்போது நடந்து வந்த DMK ஆட்சியைகலைக்க சொல்லி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் வாஜ்பாய் அவர்களை வலியுறுத்தினார் ஆனால் அவர் ஆட்சியை கலைக்க வில்லை. அதன் நன்றி கடனாக இதை தொடர்ந்து dmk உடன் பிஜேபி கூட்டணி அமைத்து மத்தியில் மீண்டும் ஆட்சியை கைபற்றினார் வாஜிபாய் அவர்கள். இந்த 5 வருடங்களை வாஜிபாய் ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்தார்


Barakat Ali
டிச 25, 2025 10:33

வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார்..... எப்படி?? திமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டா ????


முருகன்
டிச 25, 2025 10:53

நமது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் என்ற மாமனிதர் அனைவரும் சமம் என்றதால் தான் திமுக உடன் கூட்டணி வைத்தார் யாரையும்... யாக இருக்க சொல்ல வில்லை


சமீபத்திய செய்தி