உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிகவும் துல்லியமான தாக்குதல்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

மிகவும் துல்லியமான தாக்குதல்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மேலும், 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kotmw7jf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள காங்கிரஸ் எம்.பி.,யுமான சசி தரூர், மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மிகவும் துல்லியமாக இருந்தது. முரிட்கேவில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகம் உள்ளிட்ட 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, இரவு நேரத்தில் தாக்குதலை நடத்தியது மிகவும் புத்திசாலித்தனமான செயலாகும்.இந்த தாக்குதலானது பாகிஸ்தானுடன் மோதலை அதிகரிப்பதற்காக நடந்தது அல்ல. இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதலை நடத்தினால், என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை காட்டுவதற்காகத் தான். மேலும் தாக்குதலை நடத்த இந்தியாவுக்கு எந்த திட்டமும் இல்லை. பதற்றத்தை தணிக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது. இந்தியாவுடன் போர் தொடக்க விரும்பினால், பாகிஸ்தான் 4 நாட்கள் கூட தாங்காது. நீண்ட போரை நடத்த பாகிஸ்தானால் முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mecca Shivan
மே 08, 2025 17:58

அந்த பயலுக மணிசங்கர் ஐயரையும் காணோம் ..சுப்ரமணியும் வாய திறக்கலை .. இருக்கானுங்களா? இல்லையா...


KRISHNAN R
மே 08, 2025 12:17

உண்மை பேசும் மனிதன்


Amar Akbar Antony
மே 08, 2025 08:57

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 08, 2025 08:42

மூளையாக செயல்படும் பாக் தீவிரவாதத்தின் ஆணிவேரை துல்லியமாக தாக்கி அழிக்காதவரை நிரந்தர தீர்வாகுமா? இன்று நாம் நமது ராணுவ வீரர் ஒருவரை பலி கொடுத்துள்ளோம். நாம் ஏன் பாக் ராணுவத்தை தாக்கக் கூடாது?


Iniyan
மே 08, 2025 07:49

இவரை நம்ப வேண்டாம். இவரே ஒரு பாகிஸ்தான் அணுதாபி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை