உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் கமிஷன் விளக்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் கமிஷன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:பீஹாரில், இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது. வீடு, வீடாக சென்ற அதிகாரிகள், வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்து பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டனர். இதன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து, அவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. கட் ஆப் தேதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்வதற்கு பீஹார் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, நாடு முழுதும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் கமிஷன் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், 2002 - 2004க்கு இடையில் வாக்காளர் பட்டியலில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. கடைசியாக திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு, அடுத்து நடக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கட் - ஆப் தேதியாக கருதப்படும். கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை, தங்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றும்படி, மாநில அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 12 ஆவணங்கள் பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், தங்கள் மாநிலங்களில் நடந்த கடைசி சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்பதால், அவர்கள் எந்த ஆவணத்தையும் அளிக்க வேண்டியதில்லை. பீஹாரில், 2003ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெற்ற 4.96 கோடி வாக்காளர்கள், தங்கள் பிறந்த தேதி மற்றும் வசிப்பிட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மீதமுள்ளவர்கள், 12 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Iyer
செப் 18, 2025 08:46

6 கோடி போலி பங்களாதேஷி வோட்டர்களை - காங்கிரஸ், RJD, SP, TMC போன்ற தேசதுரோஹ கட்சிகள் சேர்ந்துள்ளன. அதுதவிர 15 கோடி இறந்த வோட்டார்கள் பெயரில் இந்த கட்சிகள் கள்ள வோட்டு போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆகையால் SIR மிக மிக அவசியம்.


GMM
செப் 18, 2025 08:10

வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம். தவறாக நீக்கி இருந்தால், ஆதாரம் மூலம் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். பீஹாரில், 2003ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 4.96 கோடி வாக்காளர்கள். பிறந்த தேதி மாறாது. 2003 முதல் 2025 குள் வசிப்பிடம் மாறலாம். தற்போதய வசிப்பிட சான்று தேவை. போலி ஆதார் அதிகம். அதனை மட்டும் ஆவணமாக ஏற்க கூடாது. சுத்தமான வாக்காளர் பட்டியல் இல்லை என்றால் தேர்தல் முடிவு அறிவிப்பது கடினம்.நீதிபதி ஆதார் ஏற்க தலையிட்டு இருக்க கூடாது. நாடு முழுவதும் குழப்பம் ஏற்படும்.


visu
செப் 18, 2025 07:37

தேர்தல் ஆணையம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை சோதித்து ஓட்டுரிமை வழங்க வேண்டும்


Kasimani Baskaran
செப் 18, 2025 04:06

தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் காங்கிரஸ் மன்றத்திடம் இல்லை.


தாமரை மலர்கிறது
செப் 18, 2025 01:35

நாடு முழுவதும் இருபது கோடிக்கும் அதிகமாக போலி வாக்காளர்கள் உள்ளார்கள். களையவேண்டிய அவசியம் ஆணையத்திற்கு உள்ளது.


M Ramachandran
செப் 18, 2025 00:57

தேவையான ஒன்று பாகிஸ்தான் தீவிர வாதிகள் நெஆபால்வழியாக் தமிழகத்திலும் புகுந்துள்ளார்கள். பழைய அரசுகள் செய்த தவறாய் திருத்திக்கொள்ள வேண்டும். அரசியால் க்காட்சிகள் நாட்டின் நன்மையைக்காக என்று எண்ணம் வேண்டும்.இப்போது வேண்டுமானால் அவர்களுக்கு ஒட்டு வங்கியாக இருக்கும்.பிற்பாடு அயலானாட்டினர் வசம் நம் தேசம் கூறு போட்டு. இபோதுஇருக்கும் நிலையில் மற்றைய கட்சிகள் உடன் படும் ஆனால் ரகுலகுடும்பம் தலைமையில் இருக்கும் வரை காங்கிரஸின் நிலை தேச நலம் கேள்விக்குறியாக இருக்கும்


புதிய வீடியோ