உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நாட்டுக்கு திரும்பி வந்தால் விசாரிப்போம்: விஜய் மல்லையாவுக்கு கோர்ட் நிபந்தனை

 நாட்டுக்கு திரும்பி வந்தால் விசாரிப்போம்: விஜய் மல்லையாவுக்கு கோர்ட் நிபந்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்க வேண்டுமெனில், அவர் நாடு திரும்ப வேண்டும்' என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கடந்த, 2019ல், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்தும், தன்னை பொருளாதார குற்றவாளியாக அறிவித்ததை எதிர்த்தும், இரு மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அங்கத் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'தப்பியோடிய பல குற்றவாளிகள் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்வதுடன் பொது இடங்களில் நடக்கும் கொண்டாட்டங்களில் ஈடு படுகின்றனர். இது இந்திய சட்டத்தை கேலிகூத்தாக்கும் செயல். இந்தியாவில் விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் நபர்கள் வெளிநாடுகளில் இருந்து தாக்கல் செய்யும் மனுக்களை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என, வாதிட்டார். அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய் 'ஒரு சட்டத்தின் செல்லுபடிக்கு எதிராக வழக்கு தொடர்பவர் நாட்டில் இருக்க வேண்டும் என கட்டாயமில்லை. அவரது நிதி பொறுப்பு ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டது. 14,000 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; வங்கிகள் 6,000 கோடி ரூபாய் கடனை மீட்டுள்ளன' என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறியுள்ளதாவது: மல்லையா நாடு திரும்பி அவர் மீதான குற்றவியல் வழக்குகளை எதிர் கொள்ளாதபோது, சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை எப்படி விசாரிக்க முடியும். இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க முடியாது. இரண்டில் எதை தொடர்வது என்று முடிவு செய்யுங்கள். வழக்கு பிப்., 2க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
டிச 25, 2025 16:34

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவது நவீன உலகில் அரசியல் பிசினஸ். இங்கிலாந்து ஆளும் கட்சி நினைத்தால் ஒரே மணி நேரத்தில் அனுப்பிவைக்க முடியும். ஒரு பண மூட்டையை இழக்க அவர்கள் அறிவில்லாதவர்களில்லை.


மொட்டை தாசன்...
டிச 25, 2025 10:21

பயப்படவேண்டாம் ,நீ தாராளமாக நாடு திரும்பலாம் நமது கோர்ட்டுகள் மற்றும் வக்கீல்கள் உன்னை எப்படியாவது வழக்கிலிருந்து விடுவித்துவிடுவார்கள் .


RAAJ68
டிச 25, 2025 05:45

இவருடன் சேர்ந்து இன்னொரு மோசடிக்காரர் லலித் மோடி கிறிஸ்துமஸ் பார்ட்டி நடத்தி இந்தியாவை கிண்டல் அடித்து பேசுகிறார்கள். இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தி இங்கே அழைத்து வந்து சாதாரண ஜெயிலில் தள்ள வேண்டும்.


Raj
டிச 25, 2025 05:25

அவரை நாடு கடத்த திராணி இல்லாத மத்திய அரசு மக்களை ஏமாற்றும் கோர்ட். இதே கோவாவில் நடந்த விபத்தில் அந்த ரிசார்ட்டின் உரிமையாளரை தாய்லாந்திலிருந்து நாடு கடத்தினார்கள். ஏன் இந்த பொருளாதார கொள்ளையனை கொண்டுவர திராணி இல்லையா? கேவலம்.


Sivaprakasam Chinnayan
டிச 25, 2025 21:43

திஸ் ஐஸ் right


முக்கிய வீடியோ