உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., திட்டவட்டம்

தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f8km1rj5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் ஆனதற்கு முழு முதற் காரணமே பார்லி.,யில் அ.தி.மு.க ஆதரித்து ஓட்டளித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021ல் ஆட்சிக்கு வந்த உடனே குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ., அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழகத்துக்குள் குடியுரிமை சட்டத்தை கால்வைக்க விட மாட்டோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

சும்மா இருக்காது

இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச்சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால், தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டசபையிலேயே நாங்கள் தெரிவித்தோம்.ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ., வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் தி.மு.க.,வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 86 )

Raa
பிப் 01, 2024 17:21

இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது "Republic of டுமீல் நாடு" என்ற நாட்டில் வசிப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இது தேசிய சட்டம். விஷயமே தெரியாமல் சிறுபான்மையருக்கு வஞ்சகம் செய்கின்றனர் என்ற பொய்ப்பிரச்சாரம் வேறு. பாக், பங்களாதேஷ், மியான்மர், ஆப்கானிஸ்தானம் போன்ற முஸ்லீம் நட்டுகளிலிருந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றவர்களின் 2014 க்கு பிறகு இருக்கு data வை எடுத்துப்பார்த்தால் தெரிம் உண்மை. நம்ம மக்கள் தான் எதுவுமே படிப்பதில்லையே.


பேசும் தமிழன்
பிப் 01, 2024 09:09

சிறுபான்மை மக்களின் ஒரே காவலன் மோடி அவர்கள் தான்... முத்தலாக் தடை சட்டம் ஒன்றே போதும்.. அவர் முஸ்லீம் சகோதரிகள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்று தெரிந்து கொள்ளலாம்.. முஸ்லீம் பெண்கள் ஓட்டு போடுவதால் தான்.. முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில்.. பிஜேபி அதிகளவில் வெற்றி பெற முடிகிறது !!!!


கண்ணன்
பிப் 01, 2024 06:31

மாநில அரசுகளுக்கும் குடியுரிமைக்கும் என்ன தொடர்பு? நல்ல கல்வியறிவு படைத்தோரை என்றுதான் தேர்வு செய்வோமோ?


ரமேஷ்VPT
பிப் 01, 2024 04:47

ஓட்டுவங்கி ஒன்றே இவர்களது குறிக்கோள், நாட்டில் தீவிரவாதம் பெருகி நாடு நாசமானாலும் இந்த திராவிட கட்சிகளுக்கு கவலை இல்லை. எப்படியாவது சிறப்பான்மையிரின் ஓட்டு இவர்களுக்கு வேண்டும் அவ்வளவு தான். இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு மக்கள் இனியும் பாடம் புகட்டவில்லை என்றால் அவளோ தான்.


Jayaraman Pichumani
பிப் 01, 2024 03:36

தமிழ்நாடு தனிநாடு அல்ல என்று இந்த முட்டாள்களுக்கு யார் சொல்வது?


Sathyasekaren Sathyanarayanana
பிப் 01, 2024 02:02

இந்த அந்நியமாத கொத்தடிமை திருட்டு திராவிட வியாதிகளுக்கு ஒரு சட்டம் எதற்காக வருகிறது என்று கூட தெரியாத தத்திகள். இந்த திருட்டு அந்நிய மத அடிமைகளுக்கு வோட்டை போடும் முட்டாள் ஹிந்துக்களை எதனால் அடிக்கவேண்டும்?


Ramesh Sargam
பிப் 01, 2024 00:25

தமிழகத்தில் வேறு ஒரு 'குடி'உரிமை சட்டம் அமுலுக்கு வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், டாஸ்மாக் குடிப்பவர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் வசிக்கலாம், தினம் தினம் குடிக்கலாம், அவர்கள் குடும்பத்தை சீரழிக்கலாம். இப்படி பல வசதிகள் அந்த 'குடி'மகன்களுக்கு..


Ramesh Sargam
பிப் 01, 2024 00:23

தமிழகத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழக முதல்வர் தன் குடும்பத்துடன் மீண்டும் ஓங்கோல் செல்லவேண்டிவரும். ஆகையால் எதிர்க்கிறார்.


வாசகன்
பிப் 01, 2024 00:01

இரண்டு கழகங்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பது என்பது நீட் ஒழிப்பு கையெழுத்து பெற்றது போன்றதுதான். மேற்கு வங்கத்தில் உள்ள சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தவர்கள் வெளியேற்றபடுவார்கள். அங்கு இருந்து வரும் சிறுபான்மை மக்களுக்கு இந்திய குடியுரிமை மத்திய அரசால் வழங்கப்படும். இதில் இரண்டு கழகத்தின் பங்கு என்ன?


Rajagopal
ஜன 31, 2024 21:55

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும்தான் இவர்கள் முழங்கினார்கள். ஆட்சிக் காலத்தில் பாதி முடிந்து விட்டது. திமுகவே ஆட்சியில் இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது சி ஏ ஏ சட்டத்தை எப்படி எதிர்ப்பார்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை