உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடையா: டிஜிசிஏ ஆலோசனை

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடையா: டிஜிசிஏ ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இண்டிகோ விமானத்தில் திடீரென பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்த காரணத்தினால், அதனை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து டிஜிசிஏ ஆலோசனை நடத்தி வருகிறது.கடந்த 19 ம் தேதி டில்லியில் இருந்து திமாப்பூருக்கு கிளம்ப இருந்த விமானத்தில், பயணி ஒருவர் வைத்து இருந்த லித்தியம் பேட்டரியில் ஆன பவர் பேங்க் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக ஊழியர்கள் அதனை அணைத்தனர். யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனையடுத்து இது குறித்து டிஜிசிஏ விசாரணை நடத்தியது. விமானத்தில் பவர் பேங்க்குகளை பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எப்படி கையாள்கின்றனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானங்களில் பவர் பேங்க்குகளை பயன்படுத்துவது அல்லது தடை விதிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் இந்த முடிவு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KR india
அக் 23, 2025 20:15

விமானம் பறப்பதற்கு முன்பு, உள்ளே பேட்டரி வெடித்து தீப்பிடித்து, அதன் பின், தீயை அணைத்துள்ளனர் என்பது மிகவும் சீரியஸான, பிரச்சினை விமானப் பயணிகளின் உயிர் பாதுகாப்புக்கு தான், விமான நிறுவனங்கள் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எவ்வாறு, மனித உடல்களை ஊடுருவி ஸ்கேன் கருவி பரிசோதிக்கிறதோ, அது போல், பயணிகள் தங்களுடன் கொண்டு வரும், பேட்டரி உடன் கூடிய அனைத்து விதமான மின்னணு சாதனங்களை, அதன் வெப்பநிலை மற்றும் விமானத்தில் கொண்டு செல்ல உகந்ததா ? என்று பரிசோதிக்க உரிய துறை நிபுணர்கள் மூலம் நேரடியாகவோ, அல்லது நவீன AI Robotics தொழில்நுட்ப உதவியுடனோ, பரிசோதித்து அறியும் முறை கொண்டு வர வேண்டும். அல்லது, பயணிகள் கொண்டு வரும், அனைத்து விதமான மின்னணு கருவிகளை, Boarding Pass வழங்கும் இடத்திலேயே பறிமுதல் செய்து, அவரவர் பெயரில் pack செய்து, விமானத்தின் பின்பகுதியில், எளிதில் தீப்பிடிக்காத பாதுகாப்பான Secondary Cabin உருவாக்கி அதில் கொண்டு வர வேண்டும். அந்த Secondary Cabin பகுதியை ஒரே ஒரு Switch மூலம் தனியே கழன்று கீழே விழுவது போல் தொழிநுட்பம் இருக்க வேண்டும். ஏதாவது தீப்பிடிக்க நேர்ந்தால், Main Cabin-ல் பயணிக்கும் பயணிகளாவது தப்பிப்பார்களே விமானபயணத்திற்கு முன்பு, பயணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் மொபை-லில் உள்ள முக்கிய தகவல்களை Cloud Back-up or MicroSD card எடுத்து வைத்து கொண்டு தான் பயணிக்க வேண்டும். நன்றி


Rajan A
அக் 23, 2025 18:31

விமானம் பறக்காமல் இருந்தால் பிரச்சினையே இல்லை. பவர் பாங்க் தடை செய்வதை விட, சார்ஜிங் பாயிண்ட் சீட் அருகில் கொடுத்தால் என்ன? எல்லாவற்றிற்கும் தடை விதிப்பு மடத்தனம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 23, 2025 18:20

எங்கள் குன்றிய நாட்டில் ஒரு அமைச்சர், மனித உடலில் ஓடும் மின்சாரமே தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார். அவருக்கு 2026 ல் நோபல் பரிசு கூட கிடைக்கலாம். அவரது கண்டுபிடிப்பின்படி விமானங்களில் மனிதர்களை அனுமதிப்பதா அல்லது தடைவிதிப்பதா அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா அனுமதியுடன் கூடிய தடை , அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியா என்பதை ஆராயவும் ஒரு குழு அமைக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை