உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேற்று கோல்கட்டா: இன்று ராஜஸ்தான்; ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்!

நேற்று கோல்கட்டா: இன்று ராஜஸ்தான்; ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஒரு ஹோட்டலில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஐந்து மாடி ஹோட்டலில் இருந்த சிலர், ஜன்னல்களில் இருந்து குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அஜ்மீர் தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ் பிரசாத் கூறுகையில், 'ஒரு குழந்தை உட்பட பலர் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டோம். இரண்டு பெண்கள் காயமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்துள்ளனர், என்றார்.மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் நேற்று மேற்கு வங்க ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthik
மே 01, 2025 22:31

இந்த இரண்டு தீ சம்பவங்களிலும் என் ஐ ஏ தீவிர விசாரணை நடத்த வேண்டும். காரணம் பாகிஸ்தான் ஆதரவு குள்ளநரிகள் கூட்டம் உள்நாட்டிலேயே உள்ளது மறுக்க முடியாதது. அந்த நரிகளின் செயலாகவும் இருக்கலாம். எனவே மின் கசிவாக இருக்கலாம், தற்செயலான சம்பவமாக இருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் கேசை முடிக்காமல் இதை தீவிரமாக புலனாய்வு செய்வது அவசியம்.


Nada Rajan
மே 01, 2025 15:57

ஆழ்ந்த இரங்கல்கள்.... ஆழ்ந்த இரங்கல்கள்


சமீபத்திய செய்தி