அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, ஊராட்சி தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார். தொரவி தொழிலதிபர் சுப்ரமணி மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி 'தினமலர்' நாளிதழில் கல்வி சேவையை பாராட்டி பேசினார். பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.செஞ்சிசெஞ்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சுமித்ரா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தேவதாஸ் வரவேற்றார்.செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கி தினமலர் நாளிதழில் கல்வி சேவையை பாராட்டி பேசினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.அவலுார்பேட்டைமேல்மலையனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திருமால் வரவேற்றார். பரையந்தாங்கல் கிராம ஊராட்சி தலைவர் ஏழுமலை மாணவர்களுக்கு தினமலர்-பட்டம் இதழை வழங்கி தினமலர் நாளிதழில் கல்வி சேவையை பாராட்டி பேசினார். வார்டு உறுப்பினர் அருள்தாஸ், துணை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.