மருத்துவ படிப்புக்கு போலி சான்றிதழ் தயாரித்தவர் யார் போலீஸ் விசாரணை
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் நீட் தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ், மருத்துவ கவுன்சிலிங் இட ஒதுக்கீடு சான்றிதழ்ஆகியவற்றை போலியாக தயாரித்து கொடுத்து மருத்துவப்படிப்பில் சேர்ந்த பழநியை சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி 19, அவரின் பெற்றோரான சொக்கநாதர் 55, விஜய முருகேஸ்வரி 47, ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைதுசெய்தனர்.இந்நிலையில் இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தன் பின்னணியில் இருப்பவர்கள் யார், இதேபோல் வேறு யாருக்கும் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளனரா என என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.