உள்ளூர் செய்திகள்

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தஞ்சாவூர் மாணவி தேர்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். தாய் ராணி ஆசிரியை. இவர்களது இரண்டாவது மகள் பூர்ணிஷா, 19. இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., படிக்கிறார்.பூர்ணிஷா இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக கடந்த 14 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் விளையாடி தங்கம், வெள்ளி, வெங்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.இந்நிலையில் இத்தாலி நாட்டில் இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலகசாம்பியன்ஷீப் போட்டி வரும் செப்டம்பரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணி சார்பில் சீனியர் பெண்கள் பிரிவில் பஞ்சாப் அணி மூலம் தேர்வாகியுள்ளார்.இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இது குறித்து பூர்ணிஷா கூறியதாவது: 14 ஆண்டுகளாக இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தமிழகம் சார்பில் இந்த விளையாட்டுக்கான அணி இல்லாத காரணத்தால், நான் பஞ்சாப் மாநில அணியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறேன்.வரும் செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷீப் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளேன். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஜூன் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.கடந்த 2021ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷீப் போட்டியின்போது கடைசி நேரத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இம்முறை தேர்வாகி இந்தியாவுக்காக வெற்றி வாகை சூடி வருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்