ஐஐடி மற்றும் ஐஐடிஎம் இணைந்து வழங்கும் பி.எஸ்சி., பி.சி.ஏ திட்டம்
சென்னை: சென்னை ஐஐடி மற்றும் ஐஐடிஎம் ப்ரவர்த்தக் இணைந்து பி.எஸ்சி., பி.சி.ஏ மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.செய்தி குறிப்பு:கரூர் மற்றும் கோவையை சேர்ந்த பி.எஸ்சி., பி.சி.ஏ மாணவர்களுக்காக 3 மாதகால நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு தொழில் துறைக்கு தேவையான தொழில்நுட்பத் திறன் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் பண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், விண்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் & பேக்அப் அடிப்படைகள், தனித்திறன்கள் போன்றவை இந்த பாடநெறியில் இடம்பெறும். லைட்ஸ்ட்ரோம் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் https://forms.gle/7RhAKgrGRgwr17zd6 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.