மாணவர்களுக்கு வங்கி கணக்கு; அரசு பள்ளியில் சிறப்பு முகாம்
உடுமலை : உடுமலை போடிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், வங்கிக்கணக்கு துவக்க சிறப்பு முகாம் நடக்கிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு திட்டங்களின் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்துவதற்கு, அரசு அறிவித்துள்ளது.இதன் அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் இக்கணக்கு துவங்குவதற்கு, முகாம்கள் நடத்தப்படுகிறது. தபால் வங்கிக்கணக்கு அல்லது வங்கிக்கணக்குகள் துவங்குவதற்கு, அந்தந்த பள்ளிகளில் முகாம் நடத்தப்படுகிறது.போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் நேற்றுமுன்தினம் முதல் துவங்கியது. அனைத்து மாணவர்களும் விடுபடாமல் இதை துவங்குவதற்கு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.முகாமை பயன்படுத்தி, இதற்காக, பெற்றோர் உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கு தவறாமல் வருவதற்கும், ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர்.