சிற்பக்கல்லுாரி மாணவர்களிடம் பூம்புகார் கைத்திறன் விருது போட்டி
மாமல்லபுரம்: மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பகலைக் கல்லுாரி மாணவர்களிடம், பூம்புகார் கைத்திறன் போட்டி நடத்தப்பட்டது.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம், இக்கல்லுாரி மாணவர்களிடம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்துகிறது.இதில் தேர்வுபெறும் மாணவ - மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய், வெள்ளி பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குகிறது. 2023 - 24ம் ஆண்டிற்கான போட்டி, நேற்று நடந்தது. கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச்சிற்பம், உலோக சிற்பம் மற்றும் வண்ண ஓவியம் ஆகிய பிரிவுகளில், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் ராமன், மாமல்லபுரம் பூம்புகார் நிறுவன மேலாளர் வேலு போட்டிகளின் செயல்பாட்டை பார்வையிட்டனர். சிற்ப கலைத்திறன் அடிப்படையில், 25 பேரை தேர்வு செய்து, பரிசளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.