உள்ளூர் செய்திகள்

பல்கலை தரத்தை மேம்படுத்த பதிவாளர்களுக்கு அரசு பயிற்சி

சென்னை: தமிழக பல்கலைகளை உலகத் தரவரிசை பட்டியலில் இடம்பெறச் செய்யும் வகையில், அவற்றின் தரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் சார்பில், பல்கலை பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியை, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்து பேசியதாவது:நம் பல்கலைகள் மக்களிடம் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற வேண்டும் என்பதற்காகவும், திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.பல்கலைகளில் பணியாற்றுவோரின் திறமையைப் பொறுத்து தான், அதன் வளர்ச்சியும், நிதி மேலாண்மையும் அமையும். அதை மேம்படுத்தும் வகையில், தொடர் பயிற்சிகள் வழங்க வேண்டியது அவசியம். அதன்படி இன்று, 65 உயர் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பல்கலைகளில் சர்வதேச கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்தவும், புலம்பெயர்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், தரமான ஆராய்ச்சிகள் வாயிலாக மாணவர்களை உலகத் தரத்துக்கு உயர்த்தவும் இந்த பயிற்சி உதவும்.அந்த வகையில், மாநில உயர் கல்வி மன்றம் ஏற்கனவே 1,000 கல்லுாரி பேராசிரியர்களுக்கு கற்பித்தல் முறை குறித்த பயிற்சியை வழங்கி உள்ளது.சட்டப் போராட்டத்தின் வாயிலாக, தமிழக கல்விக்கான உரிமையை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். அவருக்கு அடுத்த மாதம் 3ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்