உள்ளூர் செய்திகள்

அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்ட அகராதி

புதுச்சேரி: அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு, சட்ட அகராதியை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக, சட்டத் துறையால், &'சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம்&' என்ற அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை, அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, சட்டக் கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதத்திடம், மாணவர்களுக்கான சட்ட அகராதியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்வித்துறை செயலர் ராகேஷ் சந்திராக, உயர் கல்வித்துறை துறை இயக்குனர் கரிகாலன், எழுது பொருள் அச்சுத் துறை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 500 பிரதிகளை கொண்ட இந்த அகராதியின் மொத்த மதிப்பு, நான்கு லட்சம் ரூபாயாகும். சட்டக் கல்லுாரியில் பயிலும் மூன்றாமாண்டு மற்றும் ஐந்தாமாண்டு மாணவர்களுக்கு இலவமாக வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்