உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் தமிழ் பாட திட்ட பயிலரங்கம்

மூணாறு: மூணாறு அரசு கல்லூரியில் முதுகலை தமிழ் துறையில் வரும் கல்வி ஆண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் பாடத் திட்டம் நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான பயிலரங்கம் கல்லூரியில் ஐந்து நாட்கள் நடந்தது. தமிழ் பாடத்திட்ட குழு தலைவர் அருள்செல்வி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மனேஷ் தொடங்கி வைத்தார். கோட்டயம் மகாத்மாகாந்தி பல்கலை நியமித்த பாடத்திட்ட பயிற்றுநர் ஜிம்மிளா புதுப்பறம்பில் பயிற்சி அளித்தார். கல்லூரி துணை முதல்வர் வந்தனா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பயிலரங்கத்தை பாட திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்