உள்ளூர் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை

திருநெல்வேலி: மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்