உள்ளூர் செய்திகள்

பென்னிகுவிக் குறித்த நாவல் மணி மண்டபத்தில் வெளியீடு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் குறித்த நாவலை லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முன்பு சமர்ப்பித்து நாவலாசிரியர் பொ.கந்தசாமி வெளியிட்டார்.விருதுநகர் மாவட்டம் ஆயர்தர்மம் என்ற ஊரைச் சேர்ந்தவர் பொ.கந்தசாமி. இவர் முல்லைப் பெரியாறு அணையின் மேல் ஆர்வம் கொண்டு அதன் வரலாற்றை முழுமையாக காட்சிகள், குறிப்புகள், ஆவணங்கள், தொகுப்பு நூல் என மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எழுதத் துவங்கினார்.கடந்த ஓராண்டுக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை, தேக்கடி, குமுளி, கூடலுார், நீர்வரத்து வாய்க்கால், தேக்கடி ஷட்டர், வயல்வெளி, முசாரி பங்களா, போர் பே அணை உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு தகவல் சேகரித்தார். இதன் அடிப்படையில் நீர் விளக்கு - பென்னிகுவிக் என்ற பெயரில் புத்தகம் எழுதி முடித்தார்.இதன் முதல் பதிப்பு 260 பக்கங்கள், 112 பக்கங்கள் என இரண்டு புத்தகமாக தயாரித்து லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முன்பு சமர்ப்பித்து வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்