உள்ளூர் செய்திகள்

நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு முடிவு வெளியாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in/ www.dge.tn.gov.in/https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்