தொடக்க கல்வி பட்டய தேர்வு நாளை துவக்கம்
ஈரோடு: ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் முதல், 2ம் ஆண்டுக்கான தேர்வு நாளை துவங்கி ஜூலை 7 வரை நடக்கிறது. ஈரோடு சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலை, 10:00 மணிக்கு துவங்கி மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும்.