சுய மதிப்பீடு முறைக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், தங்களை சுய மதிப்பீடு செய்வதற்கு, தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், தங்களது செயல்பாடு, திறன், விடுப்பு உள்ளிட்ட விபரங்களுடன், தங்களை சுய மதிப்பீடு செய்து, அதன் விபரங்களை, பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.இதற்கு, தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மருத்துவ துறையில் காலிப் பணியிடங்களால், டாக்டர்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.தற்போது, அவர்களை அவர்களே சுய மதிப்பீடு செய்யக் கோருவது ஏற்புடையது இல்லை. இதை பொது சுகாதாரத் துறை திரும்பப் பெற வேண்டும் என, மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.