உள்ளூர் செய்திகள்

இடைநின்ற பள்ளி மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

குமாரபாளையம்: பள்ளிப்பாளையம் வட்டாரத்துக்குட்பட்ட பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கதிர்வேலன். இவர், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும்போது, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கதிர்வேலனை கண்டறிந்து ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தார். மேலும், சீருடை வழங்கி தொடர்ச்சியாக பள்ளிக்கு வர அறிவுரை வழங்கினார். அப்போது, பள்ளிப்பாளையம் வட்டாரக்கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லாக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி, பள்ளிபாளையம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்