இளைஞர்களுக்கு அழகுகலை பயிற்சி கலெக்டர் பொற்கொடி தகவல்
சிவகங்கை: ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுகலை பயிற்சி அளிக்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்துாரில் நடைபெற உள்ளது.பயிற்சி நடக்கும் 90 நாட்களுக்கு விடுதியில் தங்கும், உணவு செலவுகள் தாட்கோ சார்பில் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் 'www.tahdco.com' இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.