தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி: தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்புவிடப்பட்டுள்ளது.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை:தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு மே, 2026 மற்றும் ஜூன், 2026 மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஏப்., 3ம் தேதிக்குள் உரிய தேர்வு கட்டணம் செலுத்தி, நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய, தனி தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில், ஏப்., 6 மற்றும், 7ல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.