உள்ளூர் செய்திகள்

பொறியியல் மாணவர்களையும் தொற்றிக்கொண்ட வன்முறைக் கலாச்சாரம்

செம்­மஞ்­சேரி: செம்­மஞ்­சே­ரியில் உள்ள தனியார் பொறி­யியல் கல்லூ­ரியில், நான்காம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாண­வர்­க­ளி­டையே, கடும் மோதல் ஏற்­பட்­டது. இதில், 50க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் காயம் அடைந்­தனர். செம்­மஞ்­சேரி, ராஜிவ் காந்தி சாலையில் உள்ள தனியார் பொறி­யியல் கல்­லூ­ரியில், இரண்­டா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட மாண­வர்கள் படித்து வரு­கின்­றனர். நேற்று முன் தினம், மூன்றாம் ஆண்டு மாண­வர்கள் சிலர், நான்காம் ஆண்டு மாண­வர்கள் சிலரை தாக்­கி ­உள்­ளனர். இதனால் ஆத்­திரம் அடைந்த, நான்காம் ஆண்டு மாண­வர்கள், நேற்று காலை முதல் கல்­லூ­ரியில் உள்ள, உணவு விடுதி, வகுப்­ப­றைகள் என, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருந்த அனைத்து இடங்க­ளுக்கும் சென்று, அவர்­களை, உருட்டு கட்டைகளால் தாக்­கி­யுள்­ளனர். பதி­லுக்கு, மூன்றாம் ஆண்டு மாண­வர்­களும், கற்­களை கொண்டு வீசினர். இந்த மோதலில், 50க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் காய­ம­டைந்­தனர். கல்­லூரி உண­வகம், வகுப்­ப­றை­களும் சேத­ம­டைந்­தன. இதை தொடர்ந்து, கல்­லூரி நிர்­வாகம் மற்றும் செம்­மஞ்­சேரி போலீசார், நான்காம் ஆண்டு மாண­வர்­க­ளிடம் பேச்சு வார்த்தை நடத்­தினர். இதில், மூன்றாம் ஆண்டு மாண­வர்­களை கைது செய்ய வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்­தனர். பின்னர், இந்த கோரிக்­கையை வலி­யு­றுத்தி, 500க்கும் மேற்­பட்ட நான்காம் ஆண்டு மாண­வர்கள், ராஜிவ் காந்தி சாலையில், ஒன்று கூடினார். இதனால், அந்த பகு­தியில் சிறிது நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. இதை தொடர்ந்து, கல்­லூரி நிர்­வாகம், கல்­லூரி பேருந்­துகள் மூலம், மாண­வர்­களை அங்­கி­ருந்து அழைத்து சென்­றது. இது குறித்து, போலீசில் வழக்கு பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. மாண­வர்கள் மோதலை அடுத்து, கல்­லூ­ரிக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்