அரசு பிரெஞ்சு பள்ளியில் மாணவிகளுக்கு வரவேற்பு
பள்ளி துவங்கிய நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரஜினி ஜோஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் பூங்குன்றன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 451 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஷர்மீதாவை, ஓய்வு பெற்ற ஆசிரியர் வள்ளி சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் எட்வர்டு சார்லஸ், ஷகிலா, உதயபானு, சந்தோஷ்குமார், பிரியதர்ஷினி, ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.