மாணவர் தற்கொலை: ஐஐடி பேராசிரியர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை ஐஐடி.,யில் மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஷ் சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் ஜெயின் என்ற ஆராய்ச்சி மாணவர், ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், பேராசிரியர் ஆசிஷ் சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.