வேளாண் தொழில்நுட்பம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திருப்புல்லாணி: திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை பஸ் ஸ்டாப் பகுதிகளில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் நெற்பயிருக்கு பின் இரண்டாம் போக சாகுபடியாக பயிறு வகைகள் பயிரிடுவது பற்றியும், சிறுதானியங்கள்சாகுபடி தொழில்நுட்பங்கள் அதன் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருப்புல்லாணி உதவி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால், துணை அலுவலர் முஸ்தபா, தொழில்நுட்ப மேலாளர் ஜோசப், விவசாயிகள் பங்கேற்றனர்.