பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேக விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, முக்கிய முதல் நிகழ்வாக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடக்கிறது. நகரமன்ற தலைவர் சிந்துாரி, மாவட்ட கல்வி அலுவலர்களிடம், பாது-காப்பு கருதி கோவில் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.