புத்தக திருவிழா நாளை துவக்கம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் 3வது புத்தக திருவிழா நாளை துவங்குகிறது என, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 3வது புத்தக திருவிழா நாளை 2ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடக்கும் புத்தக திருவிழா தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடக்கிறது. தினமும், பேச்சாளர்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம் நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.