பாலியியல் புகார் வந்தால் உடனடி நடவடிக்கை
சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மீது, பாலியல் புகார் பெறப்பட்டால், அவர்கள் நான்கு நாட்களில் இடைநீக்கம் செய்யப்படுவதுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர்.அது, போலீசாரின் சட்ட விசாரணைக்கு இணையாக இருக்கும் என, பள்ளிக்கல்வி துறை எச்சரித்துள்ளது.