காலை உணவை ஆய்வு செய்த சி.இ.ஓ.,
மதுரை: மதுரையில் உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தை சி.இ.ஓ., தயாளன் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.அங்குள்ள ஹைடெக் லேப் செயல்பாடு, பயன்பாடுகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் தனியார் பள்ளி டி.இ.ஓ., கார்மேகம் உள்ளிட்டோர் சென்றனர்.