உள்ளூர் செய்திகள்

ஜே.எஸ்., குளோபல் பள்ளி ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 7ம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் சென்னை, பிரெஞ்சு சர்வதேச பள்ளியின் சுற்றுச்சூழல் பொறியாளர் மரியன் வெர்க்க்ரேன், சேலம் ரிஷி நேத்ராலயா மருத்துவமனை கண் மருத்துவர் செல்வரங்கம் ஆகியோர், 'பெற்றோர்கள் தான் மாணவர்களின் ரோல் மாடல், பிள்ளைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் மற்றும் அறநெறியும் கற்றுத்தர வேண்டும்,' என அறிவுரை வழங்கினர்.வேதியியல் ஆசிரியர் குப்பன் எழுதிய 'டியர்' என்ற புத்தகம் வெளியீட்டு விழாவும், கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டில் 100 சதவீத வருகை, விளையாட்டு போட்டி மற்றும் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில், நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் பாபு, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்