மாவட்ட கலை திருவிழா நவ.12ல் துவக்கம்
சென்னை: பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழா நடக்க உள்ளது.அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், மாணவ - மாணவியருக்கு நாளை மறுநாள் கலைத்திருவிழா துவங்கி நடக்க உள்ளது.போட்டியில், வட்டார அளவில் வென்ற, 2,200 அரசு பள்ளி மாணவர்கள், 2,000 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.