பிசியோதெரபிஸ்ட்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்
சென்னை: ’பிசியோதெரபிஸ்ட்களின் நியாயமான கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என, த.மா.கா., (மூ) தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கை: ’பிசியோதெரபி’ பட்டாரிகள், ’கிளினிக்’குகளை துவங்குவதற்கு, அவர்களுக்கென்று ஒரு வரையறையை, தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். பிசியோதெரபி அல்லாத பிற படிப்பு படிக்கின்றவர்கள், பிசியோதெரபி கருவிகளைப் பயன்படுத்தி, சிகிச்சை முறைகளை கையாள்வது தவிர்க்கப்பட, மாநில சுகாதாரத் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட்கள் தங்கள் படிப்பை, பாரா மெடிக்கல் பிரிவிருந்து நீக்கி, தனித்துவம் கொண்ட மருத்துவ படிப்பாக, இந்திய சட்டத் துறை அங்கீகரிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் பிசியோதெரபிஸ்ட்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.