உள்ளூர் செய்திகள்

மல்யுத்த போட்டி மாணவிக்கு தங்கம்

உடுமலை: ஹரியானா மாநிலத்தில் நடந்த தேசிய மல்யுத்த போட்டியில், தங்கப்பதக்கத்தை திருப்பூர் மாணவி வென்றுள்ளார்.திருப்பூர் குமரன் கல்லுாரியில், பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர், சத்யா. தமிழக மல்யுத்த அணியில் இடம் பெற்றுள்ள இவர், ஹரியானா மாநிலம், ரோத்தக் மகரிஷி தயாளந்த் பல்கலையில், நான்கு நாட்கள் நடந்த தேசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்று, 84 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். தேசிய போட்டியில் தங்கம் வென்ற மாணவியை கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்