மருத்துவக் கல்லுாரிக்கு உபகரணங்கள் வழங்கல்
சிதம்பரம்: சிதம்பரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மக்கள் மருந்தகம் சார்பில், மருத்துவமனைக்கு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை, சென்ட்ரல் ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் தீபக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது.சங்க செயலாளர் ஆறுமுகம், மக்கள் மருந்தகம் உரிமையாளர் கேசவன், சுசில்குமார் சல்லானி, வழக்கறிஞர் ஜெய பாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.